செய்திகள் :

'என் தந்தை கொல்லப்பட வேண்டும் என்கிறார்' குற்றம்சாட்டும் ட்ரம்ப் மகன்; '86 47' எண்ணின் பின்னணி என்ன?

post image

'என் தந்தை (ட்ரம்ப்) கொல்லப்பட வேண்டும் என்று சொல்கிறார்' என்று அமெரிக்க பெடரல் வங்கியின் முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் காமி மீது குற்றம்சாட்டியுள்ளார், ட்ரம்பின் மகன் ட்ரம்ப் ஜூனியர்.

மேலே கூறியிருப்பதுப்போல, ஜேம்ஸ் காமி பெடரல் வங்கியின் முன்னாள் இயக்குநர் ஆவார். ட்ரம்பின் 2017 டு 2021 அதிபர் ஆட்சியின் போது, ஜேம்ஸ் காமியை அந்தப் பதவியில் இருந்து நீக்கியிருந்தார்.

தற்போது மீண்டும் ட்ரம்ப் அதிபராக பதவியேற்றுள்ளார்.

ஜேம்ஸ் காமியின் பதிவு
ஜேம்ஸ் காமியின் பதிவு

இந்த நிலையில், ஜேம்ஸ் காமி தனது சமூக வலைதள பக்கத்தில், "எனது பீச் நடைபயணத்தின் போது 'கூல்' ஆன ஒரு சிப்பி உருவாக்கம்" என்ற கேப்ஷனோடு, கடல் சிப்பிகளால் உருவாக்கிய '86 47' என்கிற எண்ணின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

ஆனால், அந்தப் பதிவையே தற்போது காமி நீக்கிவிட்டார்.

இருந்தும், அந்தப் பதிவின் ஸ்கிரீன்ஷாட் தீயாக பரவ தொடங்கியுள்ளது.

இந்தப் போட்டோவை பதிவு செய்து ட்ரம்பின் மகனான ட்ரம்ப் ஜூனியர், "என்னுடைய தந்தை கொல்லப்பட வேண்டும் என்று ஜேம்ஸ் காமி பதிவிட்டிருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.

இது உண்மையா... பொய்யா என்று தெரியவில்லை. அமெரிக்கா பாதுகாப்புத் துறையும் இது உண்மை என்று உறுதிசெய்யவில்லை.

ஆனால், ஏன் இது பதிவு இப்படி உருமாறி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

மெரியம்-வெப்ஸ்டர் என்கிற அகராதியின் படி, 86 என்றால் தூக்கிய எறியப்பட வேண்டும் என்று பொருள்.

47 என்பது ட்ரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபர் ஆவார். அதனால், இது அவரைக் குறிக்கிறது என்று பொருள் கொள்ளப்படுகிறது.

ஆனால், ஜேம்ஸ் காமி இதை உண்மையில் எதனால் பதிவிட்டார் என்பது இதுவரை தெரியவில்லை.

`யார் இந்த தியாகி... திமுக-வின் புதிய பவர் சென்டர் ரத்தீஷா?"- கேள்விகள் எழுப்பும் அதிமுக

டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி அளவில் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கும் வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்கு... மேலும் பார்க்க

TASMAC : தலைக்கு மேல் தண்ணீர்; அப்ரூவர் ஆகிறாரா விசாகன் IAS? நெருக்கும் இ.டி... சிக்கலில் மேலிடம்!

"டாஸ்மாக் தொடர்பாக பதிந்த வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன..?", என கேள்விக் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஒரு வார காலத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்யச் சொல்லி சமீபத்தில் உ... மேலும் பார்க்க

நெல்லை: திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; 3 பேர் கைது - ரகசிய இடத்தில் விசாரணை

நெல்லையை அடுத்த கீழ முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்தவர் செல்வசங்கர். பாளை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராகச் செயல்பட்டு வருகிறார். அவரது மனைவி சரஸ்வதி, பாளையங்கோட்டை யூனியன் கவுன்சிலராக உள்ளார்.கடந்த இரு த... மேலும் பார்க்க

'உழைப்பவர்களை சுரண்டி பிழைக்கும் இயக்கம் திமுக'- கே.டி‌.ராஜேந்திர பாலாஜி சாடல்!

விருதுநகர் மாவட்டம்,, ராஜபாளையம் நகர் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த... மேலும் பார்க்க

Protest Haka: மாவோரி பழங்குடியின எம்.பி-க்கள் சஸ்பெண்ட்; நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நடவடிக்கை!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வைதாங்கி ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நியூசிலாந்து நாடளுமன்றத்தில் ஒரு மசோதா கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிராக மாவோரி இன எம்.பி ஹனா, மாவோரி இன மக்களின் பாரம்பர்ய பாடலை பாடியவார... மேலும் பார்க்க

பாமக: `இது அப்பா-மகன் போர் மட்டும் அல்ல’ - கூட்டத்தை புறக்கணித்த அன்புமணியும், ராமதாஸ் ரியாக்‌ஷனும்

`பா.ம.க-வின் மாவட்டத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (இன்று) வெள்ளிக்கிழமை தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற இருக்கிறது. அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்’ என்று நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்க... மேலும் பார்க்க