செய்திகள் :

'உழைப்பவர்களை சுரண்டி பிழைக்கும் இயக்கம் திமுக'- கே.டி‌.ராஜேந்திர பாலாஜி சாடல்!

post image

விருதுநகர் மாவட்டம்,, ராஜபாளையம் நகர் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அ.தி.மு.க. வெற்றி பெறும். மத்திய அரசுக்கு யோசனை கூறி, நிதிகளை பெறும் வகையில் எடப்பாடி பழனிசாமி நல்ல பொறுப்புக்கு வரும் காலம் நெருங்கி வருகிறது. அ.தி.மு.க. மேல் நம்பிக்கை இருப்பதால்தான் அ.தி.மு.க.வில் உறுப்பினராய் இணைவதற்கு அதிகளவில் பெண்கள் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்களை வழங்குகின்றனர். அ.தி.மு.க.வினர் பெண்களை தாயாக நேசிக்கக் கூடியவர்கள்.‌

ராஜேந்திர பாலாஜி

தி.மு.க.வினரிடம் பெண்கள் செல் நம்பர் வழங்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் களவாணித்தனம் செய்வார்கள். மக்களை ஏமாற்றித்தான் தி.மு.க. ஓட்டு வாங்கியது. சொத்து வரி உயர்வுக்கு பின்பு வரி கட்டாதவர்கள் வீடுகளுக்கு முன் குப்பையை கொட்டுவது, கதவை பூட்டுவது போன்ற அகராதித்தனம், அடாவடித்தனம் அ.தி.மு.க. ஆட்சியில் நடக்கவில்லை. உழைப்பவர்களை சுரண்டி பிழைக்கும் இயக்கமாக தி.மு.க. மாறிவிட்டது. தி.மு.க.வில் அதிகார வர்க்கத்தினர் மட்டும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சாலை வியாபாரிகளிடம் கமிஷன் வாங்கும் இழிநிலை மாற வேண்டும் என்றால் தி.மு.க ஆட்சி ஒழிய வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தான் தி.மு.க. ஆட்சியில் வெள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். வேஷம் போடும் தி.மு.க.வினரின் நாடக வேஷத்தை கலைத்து அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

கூட்டம்

அனைத்து இடங்களிலும் கமிஷன், கரெப்ஷன், கலெக்சன் இதுதான் தி.மு.க.வின் குறிக்கோள். தி.மு.க. ஆட்சி, வெற்று பகட்டுக்காக நடைபெறுகிறது. ஸ்டாலின் தலைமையில் உள்ள ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்து விட்டனர். ஆனால் தெருக்கோடிக்கு வந்து மக்களை சந்திப்பது கிடையாது. வரியை போட்டு வசூல் செய்து சாப்பிடுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். தி.மு.க.வினரின் ஆட்டம்பாட்டமெல்லாம் முடிவுக்கு வரப்போகிறது. ராஜபாளையத்தில், பழைய பேருந்து நிலையத்தை புதுப்பிக்கிறேன் என்ற பெயரில் அனைத்து இடங்களிலும் கடைகள் கட்டி உள்ளனர். மக்கள் காத்திருப்பதற்கும், பேருந்து வருவதற்கும் இடம் குறைந்துவிட்டது. ஜன நெருக்கடியை அதிகரித்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் அரசுதான் தி.மு.க. ஏலம் விட்டு பணம் பார்ப்பதற்காகவும், திமுகவினர் ஆளுக்கொரு கடை நடத்துவதற்காகவும் பேருந்து நிலையத்தை பாழாக்கி விட்டனர்.

ஏழை மக்கள் 25,000 வாடகை கொடுத்து கடை நடத்த முடியுமா?. அதுபோக இரண்டு லட்சம் ரூபாய் முன்பணம் கட்ட வேண்டும். மேலும் கட்சியினருக்கு தனியாக பணம் வழங்க வேண்டும். ஊழல் செய்து சேர்த்த பணம் நிற்காது. ஏழையின் வயிற்றில் அடித்து சேர்த்த பணம் கண்டிப்பாக நிலைக்காது. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். வியாபாரம் பார்த்து வரும் லாபத்தில் வீடு கட்டலாம். ஆனால் கொள்ளையடித்த பணத்தில் சுரங்கம் தோண்டி வீடு கட்டுகிறார் ஒருவர். வாக்களித்த மக்களுக்கு நியாயமாக நம்பிக்கையாக அவர்கள் நடக்கவில்லை" என பேசினார்.

`யார் இந்த தியாகி... திமுக-வின் புதிய பவர் சென்டர் ரத்தீஷா?"- கேள்விகள் எழுப்பும் அதிமுக

டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி அளவில் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கும் வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்கு... மேலும் பார்க்க

'என் தந்தை கொல்லப்பட வேண்டும் என்கிறார்' குற்றம்சாட்டும் ட்ரம்ப் மகன்; '86 47' எண்ணின் பின்னணி என்ன?

'என் தந்தை (ட்ரம்ப்) கொல்லப்பட வேண்டும் என்று சொல்கிறார்' என்று அமெரிக்க பெடரல் வங்கியின் முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் காமி மீது குற்றம்சாட்டியுள்ளார், ட்ரம்பின் மகன் ட்ரம்ப் ஜூனியர். மேலே கூறியிருப்பதுப... மேலும் பார்க்க

TASMAC : தலைக்கு மேல் தண்ணீர்; அப்ரூவர் ஆகிறாரா விசாகன் IAS? நெருக்கும் இ.டி... சிக்கலில் மேலிடம்!

"டாஸ்மாக் தொடர்பாக பதிந்த வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன..?", என கேள்விக் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஒரு வார காலத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்யச் சொல்லி சமீபத்தில் உ... மேலும் பார்க்க

நெல்லை: திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; 3 பேர் கைது - ரகசிய இடத்தில் விசாரணை

நெல்லையை அடுத்த கீழ முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்தவர் செல்வசங்கர். பாளை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராகச் செயல்பட்டு வருகிறார். அவரது மனைவி சரஸ்வதி, பாளையங்கோட்டை யூனியன் கவுன்சிலராக உள்ளார்.கடந்த இரு த... மேலும் பார்க்க

Protest Haka: மாவோரி பழங்குடியின எம்.பி-க்கள் சஸ்பெண்ட்; நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நடவடிக்கை!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வைதாங்கி ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நியூசிலாந்து நாடளுமன்றத்தில் ஒரு மசோதா கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிராக மாவோரி இன எம்.பி ஹனா, மாவோரி இன மக்களின் பாரம்பர்ய பாடலை பாடியவார... மேலும் பார்க்க

பாமக: `இது அப்பா-மகன் போர் மட்டும் அல்ல’ - கூட்டத்தை புறக்கணித்த அன்புமணியும், ராமதாஸ் ரியாக்‌ஷனும்

`பா.ம.க-வின் மாவட்டத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (இன்று) வெள்ளிக்கிழமை தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற இருக்கிறது. அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்’ என்று நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்க... மேலும் பார்க்க