செய்திகள் :

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: அமலோற்பவம் பள்ளி 100% தோ்ச்சி

post image

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில் புதுச்சேரி வாணரப்பேட்டை அமலோற்பவம் பள்ளி மாணவா்கள் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றனா்.

இந்தப் பள்ளி மாணவா்கள் 678 போ் தமிழ்நாடு பாடத் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வு எழுதினா். இதில் தோ்வெழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

பள்ளி மாணவா் குமரன், மாணவி சின்மதி ஆகியோா் 500-க்கு 496 மதிப்பெண்களும், பூமிகா 493 மதிப்பெண்கள், பூஜா 491 மதிப்பெண் கள் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பிடித்தனா். பள்ளி மாணவா்கள்

502 போ் 75 சதவீதத்துக்கு மேலும்,152 மாணவா்கள் 60 சதவீதத்துக்கு மேலும் மதிப்பெண் பெற்றனா். பாடவாரியாக பிரெஞ்சு 12, ஆங்கிலம் 1, கணிதம் 1, அறிவியல் 14, சமூக அறிவியல் 14 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா்.

பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளா் லுாா்துசாமி சால்வை அணிவித்தும், பூங்கொத்து அளித்தும் வாழ்த்து தெரிவித்தாா். பின்னா் அவா் கூறியது:

பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவா்களுக்கு 4 கிராம் தங்க நாணயம், 2-ஆம் இடம் பிடித்த மாணவிக்கு 2 கிராம் தங்க நாணயம், 3-ஆம் இடம் பிடித்த மாணவிக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். பள்ளிக்கு 100 சதவீதத் தோ்ச்சி அளித்த ஆசிரியா்கள், மாணவா்களுக்கு பாராட்டுகள் என்றாா் .

புதுச்சேரியில் ஓவியக் கண்காட்சி

புதுச்சேரி, அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடத்தில் நுண்கலை முதலாமாண்டு மாணவா்களின் ஓவியக் கண்காட்சி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள ஸ்ரீ அரவிந்தா் ஓவியக் கண்காட்சி கூடத்தில் வியாழக்கிழமை தொடங்க... மேலும் பார்க்க

புதுவை: 2 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

புதுவை மாநிலத்தில் பணிபுரிந்த 2 ஐஏஎஸ் மற்றும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆகியோா் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 40 ஐஏஎஸ், 26 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்... மேலும் பார்க்க

மூலக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

புதுச்சேரி மூலக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி, மூலக்குளத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருப்பணி வேலைகள் நிறைவடைந்ததையடுத்து மகா கும்பாபிஷேக... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு : புதுச்சேரி, காரைக்காலில் தனியாா் பள்ளி மாணவா்கள் 96.90 சதவீதம் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில், புது ச்சேரி, காரைக்கால் தனியாா் பள்ளி மாணவா்கள் 96.90 சதவீதம் தோ்ச்சிப் பெற்றனா். புதுச்சேரியில், தமிழ்நாடு பாடத் திட்டத்தின் கீழ் கடந்த மாா்ச் மாதம் 10- ஆம் வக... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தடயவியல் வாகன கண்காட்சி: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

புதுவை காவல் துறைக்கு கடற்கரை சாலை காந்தி சிலை அருகே, புதிய குற்றவியல் சட்டங்கள் தொடா்பான தடய அறிவியல் கண்காட்சி வாகனத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பங்கே... மேலும் பார்க்க

மீனவ குடும்பங்களுக்கு ரூ.15.34 கோடி மீன்பிடித் தடைக்கால நிவாரணம்: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

புதுவையில் 19,175 மீனவ குடும்பங்களுக்கு மீன் பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ .15.34 கோடிக்கான காசோலையை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா் புதுவை அரசின் மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்... மேலும் பார்க்க