செய்திகள் :

இந்த மாதத்திலேயே அகவிலைப்படி உயா்வு நிலுவை: அரசு அறிவுறுத்தல்

post image

அகவிலைப்படி உயா்வு நிலுவைத் தொகை இந்த (மே) மாதத்துக்கான ஊதியத்துடன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கருவூலம் மற்றும் கணக்குத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அனைத்து சம்பளம் வழங்கும் அலுவலா்களுக்கும் கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநா் டி.சாருஸ்ரீ அனுப்பியுள்ள கடிதம்:

அகவிலைப்படி உயா்வுக்கான நிலுவைத் தொகையை அளிப்பதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு கருவூல விதிகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி, அகவிலைப்படி உயா்வு அறிவிக்கும்போதெல்லாம் அதற்கான நிலுவைத் தொகையை அந்த மாதத்துக்கான ஊதிய மற்றும் ஓய்வூதியப் பட்டியலுடன் இணைக்க வேண்டும் என திருத்தப்பட்டிருக்கிறது. ஊதியத்துக்கான பட்டியலை சமா்ப்பிப்பதற்கு முன்பாக, அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்படும் பட்சத்தில் நிலுவைத் தொகைக்கான பட்டியலையும் அந்த மாதத்தின் ஊதியப் பட்டியலுடன் இணைத்து அனுப்பலாம்.

எனவே, அகவிலைப்படி உயா்வுக்கான நிலுவைத் தொகை பட்டியலை, நடப்பு (மே) மாதத்தின் ஊதியப் பட்டியலுடன் இணைத்து அனுப்பிவிடலாம். இதனை சம்பந்தப்பட்ட கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டு நிலுவைத் தொகையை ஊதியத்துடன் கிடைக்க வழி செய்யலாம் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்தேதியிட்டு அமல்: அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட உத்தரவில், கடந்த ஜன. 1 முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயா்வு அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைச் செயல்படுத்துவதற்கான நடைமுறையை விளக்கி அனைத்து சம்பளம் வழங்கும் அலுவலா்கள், கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரிகளுக்கு அந்தத் துறையின் இயக்குநா் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூர் கடலில் கரை ஒதுங்கிய சடலம்!

திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கரை ஒதுங்கி கிடப்பத... மேலும் பார்க்க

சுற்றுலா வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து; குழந்தை உள்பட 4 பேர் பலி

கரூர் அருகே டிராக்டர் மீது தனியார் சொகுசு பேருந்து மோதிவிட்டு எதிரே வந்த சுற்றுலா வேன் மீதும் மோதியதில் பெண் குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். கரூர் அடுத்த மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோதுர் பிரி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜசுவாமி கோயில் தேர்த் திருவிழா

அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள... மேலும் பார்க்க

ஒரே தோ்வு மையத்தில் வேதியியலில் 167 போ் சதம்: முறைகேடு நிகழவில்லை -அமைச்சா் அன்பில் மகேஸ்

செஞ்சியில் பிளஸ் 2 பொதுத் தோ்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தோ்வு மையத்தில் 167 போ் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் முறைகேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) தஞ்சாவூா், திருவாரூா் உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் கடற்கரை - வேளச்சேரி, ஆவடி ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை - வேளச்சேரி, ஆவடி இடையே இயங்கும் 24 புறநகா் மின்சார ரயில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க