செய்திகள் :

மீண்டும் தலைத்தூக்கும் கரோனா? சிங்கப்பூர், ஹாங்காங்கில் அதிகரிக்கும் பாதிப்புகள்!

post image

தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகின்றன.

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலும், சீனா மற்றும் தாய்லாந்திலும் புதியதாக கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹாங்காங் நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரங்களில் கரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக ஹாங்காங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டில், கடந்த மார்ச் மாதம் 1.7 சதவிகிதமாக இருந்த கரோனா தொற்றின் பரவல் தற்போது 11.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவான உச்சக்கட்ட பாதிப்புகளைவிட அதிகமென மத்திய சுகாதாரப் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும் மாதிரிகளில் தொற்று உறுதியாவது தற்போது உச்சத்தை அடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாட்டில் சுமார் ஓராண்டு கழித்து முதல்முறையாக கரோனா பாதிப்பு குறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தொற்றுக்கள், ஒரே வாரத்தில் சுமார் 28 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும்; இதன்மூலம், 14,200 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது எனக் கணக்கிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நாள்தோறும் கரோனா பாதிப்பினால் சிங்கப்பூரின் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், உள்ளூரில் பரவும் கரோனா வைரஸானது, முந்தைய வைரஸைவிட வேகமாகப் பரவி, கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும் என்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், மீண்டும் பரவும் கரோனா பாதிப்பானது குறைந்த எதிர்ப்பு சக்தியினால் மட்டுமே ஏற்படுவதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இஸ்ரேல் தாக்குல்: காஸாவில் 20 பேர் பலி! டிரம்ப் பயணம் மாற்றத்தை ஏற்படுத்துமா?

எவரெஸ்ட் மலையேற்றம்: இந்தியர் உள்பட 2 வீரர்கள் பலி!

நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் 2 வீரர்கள் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமய மலைத்தொடர்களில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் ஏறிய இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 வீரர்கள் ப... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அமைதியான நாடு; இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது: பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு என்று அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் இன்று(மே 16) பேசியிருக்கிறார்.பாகிஸ்தானில் ராணுவத்தில் சேவையாற்றி உயிர்நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளான மே ... மேலும் பார்க்க

காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! ஒரே நாளில் 93 பேர் பலி!

காஸாவின் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் ஒரே நாளில் 93 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. காஸாவின் தெயிர் அல்-பலா மற்றும் கான்யூனிஸ் ஆகிய பகுதிகளின் மீது நேற்று (மே 15) நள்ளிரவு துவங்கிய இஸ்... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை!

ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும்நிலையில், இறுதியாக பேச்சுவார்த்தையில் இரு நாடு... மேலும் பார்க்க

பப்புவா நியூ கினியாவில் போலியோ பரவல்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

பப்புவா நியூ கினியா நாட்டில் போலியோ தொற்று பரவுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள லேய் எனும் கடலோர நகரத்தில், வழக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட... மேலும் பார்க்க

இந்தோனேசியா: கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 20 பேர் பலி

இந்தோனேசியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தோனேசியாவில் பப்புவா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பு... மேலும் பார்க்க