செய்திகள் :

சென்னை: தன்பாலின ஈர்ப்பு செயலி மூலம் அறிமுகம்; டிரைவரால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

post image

வடசென்னையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (பெயர் மாற்றம்). 26 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவரின் அப்பா ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். உறவினர் வீட்டின் திருமணத்துக்காக ராஜேஷ் குடும்பத்தினருடன் பெங்களூரு சென்றார். பின்னர் அவர் மட்டும் வீடு திரும்பினார். வீட்டில் தனியாக இருந்த ராஜேஷ், தன்பாலின சேர்க்கையாளர்களுக்கான செயலி மூலம் ஏற்கெனவே தனக்கு அறிமுகமான ஜெயந்தி நாதன் என்பவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது, 'வீட்டில் நான் மட்டும் தனியாக இருக்கிறேன், வந்தால் சந்தோஷமாக இருக்கலாம்' என்று கூறியிருக்கிறார். அதற்கு பதிலளித்த ஜெயந்தி நாதன், என்னோடு ஃப்ரெண்ட்ஸ் இருக்கிறார்கள். அதனால் தனியாக வர முடியாது. அவர்களையும் வீட்டுக்கு அழைத்து வரட்டுமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு ராஜேஷ் சம்மதிக்க, அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மேல் ஆட்டோவில் ஜெயந்தி நாதனும் அவருடைய நண்பர் ஐயப்பன், அவரின் தோழியான 17 வயது சிறுமி ஆகியோர் ராஜேஷ் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.

தங்க நகைகள்

பின்னர் ராஜேசும் ஜெயந்தி நாதனும் ஒர் அறைக்கு சென்றிருக்கிறார்கள். ஐயப்பனும் 17 வயது சிறுமியும் இன்னொரு அறையில் இருந்திருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் ராஜேஷை ஜெயந் திநாதன் திடீரென கயிற்றால் கட்டத் தொடங்கினார். பின்னர் ஐயப்பன், சிறுமி ஆகியோரும் சேர்ந்து ராஜேஷை அங்கிருந்த கழிவறைக்குள் போட்டு பூட்டினர். அதன் பிறகு ராஜேஷிடம் நகைகள், பணம் எங்கு இருக்கிறது என கேட்டு அதையும் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து ஜெயந்தி நாதன், ஐயப்பன், சிறுமி ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். கழிவறைக்குள் சிக்கிக் கொண்ட ராஜேஷ், தன்னுடைய செல்போன் மூலம் வீட்டின் உரிமையாளருக்கு நள்ளிரவில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ராஜேஷை வீட்டின் உரிமையாளர் மீட்டு விவரம் கேட்டிருக்கிறார். பின்னர் ராஜேஷ், எம்.கே.பிநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் ஜெயந்தி நாதன், ஐயப்பன், சிறுமி ஆகியோரைப் பிடித்த போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் ஜெயந்தி நாதன், ஐயப்பன் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த வழக்கில் சிறுமிக்கு தொடர்பு இருப்பதால் அவரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்க போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள்.

குப்பைத் தொட்டியில் சடலமாகக் கிடந்த ஒரு வயது பெண் குழந்தை; விசாணையில் போலீஸார்-நடந்தது என்ன?

உத்திரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர்கள் ரமேஷ்குமார்- காஜல் தம்பதி. இவர்களுக்கு ஆர்கேஷ் (4) என்ற மகனும் மஹி (1) என்ற மகளும் இருந்தனர். இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர், வீரபாண்டி, சுண்டமேடு ப... மேலும் பார்க்க

``கணவரை காணவில்லை'' - காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் நாடகம்.. விசாரணையில் பகீர்!

உத்தரப்பிரதேசத்தில் காதலன் துணையோடு பெண்கள், கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இந்நிலையில்,முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை அவரது மனைவி காதலனோடு சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் தற்போது... மேலும் பார்க்க

விருதுநகர் அரசு மருத்துவமனை: கையை அறுத்து போக்சோ கைதி செய்த விபரீதம்.. நடந்தது என்ன?

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போக்சோ வழக்கு கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சிவகாசி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த முருகன் (வயது 57), பள்ளி சிறுமி ஒருவரை ... மேலும் பார்க்க

காரில் வைக்கும்படி முதலாளி கொடுத்த ரூ.1.51 கோடி; கோயில் உண்டியலில் போட்ட டிரைவர் - ஷாக்கான ஆடிட்டர்

பெங்களூரு கோதண்டராமபுரத்தில் வசிக்கும் ஆடிட்டர் ஒருவரிடம் கடந்த 10 ஆண்டுகளாக டிரைவராக வேலை செய்து வந்தவர் ராஜேஷ். இதனால் ராஜேஷ் மீது ஆடிட்டருக்கு மிகவும் நம்பிக்கை உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க

கரூர்: பள்ளி தாளாளருக்கு 23 ஆண்டுகள்; தமிழ் ஆசிரியருக்கு 43 ஆண்டுகள் - போக்சோ வழக்கில் அதிரடி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பூஞ்சோலைப்புதூரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், பாப்பிரெட்டிபட்டியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 10 - ம் வகுப்பு பயின்று வந்தார். அப்போது , அப்பள்ளியில் பணிபுரிந்... மேலும் பார்க்க

நெல்லை பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை வழக்கு; ஜாமீனில் சென்றவர்கள் தலைமறைவு - வழக்கு விசாரணை தொய்வு?

நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் தீபக்ராஜ். பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி, தனது தோழியுடன் ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றபோது கொட... மேலும் பார்க்க