செய்திகள் :

காரில் வைக்கும்படி முதலாளி கொடுத்த ரூ.1.51 கோடி; கோயில் உண்டியலில் போட்ட டிரைவர் - ஷாக்கான ஆடிட்டர்

post image

பெங்களூரு கோதண்டராமபுரத்தில் வசிக்கும் ஆடிட்டர் ஒருவரிடம் கடந்த 10 ஆண்டுகளாக டிரைவராக வேலை செய்து வந்தவர் ராஜேஷ். இதனால் ராஜேஷ் மீது ஆடிட்டருக்கு மிகவும் நம்பிக்கை உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடிட்டர் தனது டிரைவர் ராஜேஷிடம் பேக் ஒன்றை கொடுத்து அதனை தனது காரில் வைக்கும்படியும், அதில் பணம் இருப்பதாகவும் கூறி கொடுத்தார்.

மாயமான டிரைவர்

பணம் இருந்த பேக்கை கொடுத்து அனுப்பிய பிறகு சிறிது நேரம் கழித்து ஆடிட்டர் வங்கிக்கு செல்வதற்காக வீட்டு படிக்கட்டில் இறங்கி கீழே வந்தார். அங்கு காரையோ அல்லது டிரைவரையோ காணவில்லை. உடனே ஆடிட்டர் தனது டிரைவருக்கு போன் செய்து பார்த்தார். போன் எடுத்து பேசிய ராஜேஷ் மருந்து வாங்க வந்திருப்பதாகவும், 10 நிமிடத்தில் வந்துவிடுவதாகவும் குறிப்பிட்டார்.

டிரைவர் (சித்திரிப்பு படம்)

ஆனால் சொன்னபடி 10 நிமிடத்தில் வரவில்லை. இதையடுத்து ஆடிட்டர் அவசரமாக தனது அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவரது கார் நின்றது. ஆனால் ராஜேஷை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து ஆடிட்டர் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து ராஜேஷை தேடி வந்தனர். அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விசாரணைக்கு ஆஜராகும்படி போலீஸார் கேட்டுக்கொண்டனர்.

ராஜேஷ் போலீஸில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார். அவர் பணத்தை எடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்தனர். ஆடிட்டர் கொடுத்த அந்த பணத்தில் ஒரு லட்சத்திற்கு தனது குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கியதாக தெரிவித்தார்.

பணத்தை திரும்ப பெற முடியாது!

எஞ்சிய பணத்தை கோயில் உண்டியலில் போட்டுவிட்டதாக தெரிவித்தார். இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோயில் உண்டியலில் போட்ட பணத்தை திரும்ப பெற முடியாது. கோயில் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் கோயிலுக்குத்தான் சொந்தமாகும். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸார் திணறிக்கொண்டிருக்கின்றனர்.

கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக காரில் வைக்க சொன்ன பணத்தை கோயில் உண்டியலில் போட்ட டிரைவர் மீது போலீஸார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் சென்னை திருப்போரூர் கந்தசாமி கோயில் உண்டியலில் ஒரு லட்சம் மதிப்புள்ள ஐபோன் விழுந்துவிட்டது. அதனை கோயில் நிர்வாகம் திரும்ப கொடுக்க மறுத்துவிட்டது. அது கோயிலுக்கு சொந்தம் என்று கோயில் நிர்வாகம் சொல்லிவிட்டது குறிப்பிடத்தக்கது.

``கணவரை காணவில்லை'' - காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் நாடகம்.. விசாரணையில் பகீர்!

உத்தரப்பிரதேசத்தில் காதலன் துணையோடு பெண்கள், கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இந்நிலையில்,முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை அவரது மனைவி காதலனோடு சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் தற்போது... மேலும் பார்க்க

விருதுநகர் அரசு மருத்துவமனை: கையை அறுத்து போக்சோ கைதி செய்த விபரீதம்.. நடந்தது என்ன?

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போக்சோ வழக்கு கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சிவகாசி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த முருகன் (வயது 57), பள்ளி சிறுமி ஒருவரை ... மேலும் பார்க்க

கரூர்: பள்ளி தாளாளருக்கு 23 ஆண்டுகள்; தமிழ் ஆசிரியருக்கு 43 ஆண்டுகள் - போக்சோ வழக்கில் அதிரடி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பூஞ்சோலைப்புதூரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், பாப்பிரெட்டிபட்டியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 10 - ம் வகுப்பு பயின்று வந்தார். அப்போது , அப்பள்ளியில் பணிபுரிந்... மேலும் பார்க்க

நெல்லை பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை வழக்கு; ஜாமீனில் சென்றவர்கள் தலைமறைவு - வழக்கு விசாரணை தொய்வு?

நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் தீபக்ராஜ். பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி, தனது தோழியுடன் ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றபோது கொட... மேலும் பார்க்க

பிறந்தநாள் விழா அசைவ விருந்து: 40 பேருக்கு வாந்தி, மயக்கம்; ஒருவர் இறப்பு - புதுக்கோட்டையில் சோகம்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா ஏம்பல் அருகில் உள்ள வேளாணி கிராமத்தில் வசிப்பவர் சத்யராஜ். இவரது மூன்றாவது மகன் தேவரக்சன் என்பவரின் முதல் பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது,... மேலும் பார்க்க

பிரிந்து சென்ற மனைவி திடீர் கர்ப்பம்; ஆத்திரத்தில் கணவன் செய்த செயல் - ஒரே இரவில் 3 பேர் கொலை!

ராணிப்பேட்டை மாவட்டம், கொடைக்கல் அருகிலுள்ள புதுக்குடியானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளி பாலு. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புவனேஸ்வரி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ... மேலும் பார்க்க