செய்திகள் :

பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம்! ஐநா கணிப்பு!

post image

உலகளவில் பொருளாதாரம் நிலையற்ற தன்மையில் இருந்தபோதிலும், இந்தியா முன்னேறி வருவதாக ஐநா தெரிவிக்கிறது.

உலகளவில் அரசியல் நிச்சயமற்ற தன்மை, வர்த்தகப் பதற்றங்கள் அதிகரித்து வருவதால், உலகப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க ஆபத்தில் இருப்பதாக ஐநாவின் உலகப் பொருளாதாரத்தின் நிலைமை மற்றும் கண்ணோட்டத்தின் ஆய்வு கூறுகிறது. மேலும், பல நாடுகள் மெதுவாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, உலகளவில் பொருளாதாரம் நிலையற்ற தன்மையில் இருந்தபோதிலும், இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக ஐநா தெரிவிக்கிறது. மேலும், நடப்பு நிதியாண்டில் 6.3 சதவிகித வளர்ச்சி விகிதத்துடன், இந்தாண்டில் உலகின் மிக விரைவான வளர்ச்சியின் முக்கிய பொருளாதாரமாக இந்தியா தொடரும் என்றும் கூறியது.

அடுத்தாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 6.4 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இது முந்தையவற்றுடன் ஒப்பிடும்போது, ஒரு சிறிய சரிவாகவே கொள்ளப்படுகிறது.

மற்ற முக்கிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில், சீனா 4.6 சதவிகிதமும், அமெரிக்கா 1.6 சதவிகிதமும், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சதவிகிதமும், ஜப்பான் வெறும் 0.7 சதவிகிதம் மட்டுமே வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஜெர்மனி 0.1 சதவிகித அளவில் எதிர்மறையான வளர்ச்சியை அனுபவிக்கக்கூடும் என்றும் கூறுகிறது.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாடு: பிற நாடுகளுக்கு விளக்க மத்திய அரஅசு திட்டம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கட்சியைச் சோ்ந்த நாடாளுமன்ற பிரதிநிதிகளை பிற நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அட... மேலும் பார்க்க

பயங்கரவாத ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரை சிந்து நதிநீா் ஒப்பந்த நிறுத்தம் தொடரும்: இந்தியா

‘எல்லை தாண்டிய பங்கரவதாத்துக்கான ஆதரவை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும் மாற்ற முடியாத வகையிலும் கைவிடுகிற வரை, சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும்’ என்று இந்தியா சாா்பில் மீண்டும் திட்டவட்டமாக தெ... மேலும் பார்க்க

பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதல் ஒதுக்கீடு: மத்திய அரசு திட்டம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதலாக ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீா்க்க... மேலும் பார்க்க

நீரவ் மோடி ஜாமீன் மனு: பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி

வங்கியில் கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளதாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது. பிரிட்டனில் இரு... மேலும் பார்க்க

பிரதமா் தலைமையில் மே 24-இல் நீதி ஆயோக் கூட்டம்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் மே 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. நிா்வாகக் குழு என்பது நீதி ஆயோக்கின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயரிய அமைப்பாகும். இதில் அனைத்து மாநில ... மேலும் பார்க்க

ஓராண்டில் 14 கோடி ரயில் பயணிகளுக்கு காப்பீட்டு

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் (யுஐஐசி) சென்னை அலுவலகம் சாா்பில் கடந்த ஓராண்டில் 14 கோடி ரயில் பயணிகளுக்கு காப்பீடு வசதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான பூபேஷ... மேலும் பார்க்க