செய்திகள் :

திருவள்ளூர் மாவட்டத்துக்கு 36வது இடம்! பத்தாம் வகுப்பில் 89.60% தேர்ச்சி!

post image

திருவள்ளூர்: தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் கடந்தாண்டை விட 3.76 சதவீதம் அதிகம் என்பதோடு, மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மோகனா தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் தொடங்கி, தொடர்ந்து ஏப்ரல் வரையில் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலையில் வெளியானது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 440 பள்ளிகளை உள்ளடங்கிய 147 தேர்வு மையங்களில் மாணவர்கள் 15,588, மாணவிகள் 15,717 என மொத்தம் 31305 பேர் பொதுத்தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்கள் 13,550, மாணவிகள் 14,499 பேர் என மொத்தம் 28,049 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாவட்ட அளவில் மாணவர்கள் 86.93 சதவீதமும், மாணவிகள் 92.25 சதவீதமும் என மொத்தம் 89.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் கடந்த கல்வியாண்டில் 86.52 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

அதேபோல், 2024 - 25 கல்வியாண்டில் 225 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 7838, மாணவிகள் 8265 என மொத்தம் 16,103 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்கள் 6,345, மாணவிகள் 7,313 என மொத்தம் 13,650 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுவே தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 80.95, மாணவிகள் 88.48 என மொத்தம் 84.82 சதவீதம் ஆகும். இதுவே கடந்தாண்டில் 80.06 சதவீதமாகும். நிகழாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் 36 இடம் பெற்றுள்ளது. இந்த மாவட்ட அளவில் 26 அரசு பள்ளிகள் உள்பட 97 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை!

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூ... மேலும் பார்க்க

10ஆம் வகுப்பில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டைச் சகோதரிகள்!

கோவை : கூலித் தொழிலாளியின் இரட்டை மகள்கள் ஒரே மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அருமையான வெற்றி என கொண்டாடி மகிழ்கிறார்கள் பெற்றோரும் உறவினர்களும்.கோவை மாவட்டம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூலி வேலை ... மேலும் பார்க்க

வடகாடு மோதல் சம்பவம்: தேசிய ஆதிதிராவிடர் ஆணையக்குழு ஆய்வு!

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை சந்தித்து தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆலங்கு... மேலும் பார்க்க

10 வகுப்பு பொதுத் தேர்வில் 499 மதிப்பெண் எடுத்து பொள்ளாச்சி மாணவி முதலிடம்!

கோவை பொள்ளாச்சி மாணவி சுபஸ்ரீ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்து இருந்தபடி, இன்று(மே 16) பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்... மேலும் பார்க்க

'ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார்' - நயினார் நாகேந்திரன்

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "தமிழ்நாட்டி... மேலும் பார்க்க

கடுங்கோடை காலம் இன்றுடன் முடிகிறது; இனி.. பிரதீப் ஜான்

சென்னை : கடுமையான கோடைக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. வட தமிழகம் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்மாவட்டங்களில் இன்று முதல் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மே... மேலும் பார்க்க