செய்திகள் :

10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: காஞ்சிபுரத்தில் 94.85% தேர்ச்சி!

post image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 183 பள்ளிகளை சேர்ந்த 7,748 மாணவர்களும், 7,450 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 198 பேர் தேர்வு எழுதினர்.

வினாத்தாள்கள் திருத்தப்பட்டு இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 94.85 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் 93.02 சதவீத மாணவர்களும், 96.75 சதவீத மாணவிகளும் என மொத்தம் 94.85 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் அரசு பள்ளி 93.36 % தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகள் 32 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன. 45 தனியார் பள்ளிகள் 100% அடைந்துள்ளன.

தேர்வு முடிவுகளின்படி காஞ்சிபுரம் மாவட்டம் 16 ஆம் இடத்தையும், அரசு பள்ளிகளைப் பொருத்தவரை 15 வது இடத்திலும் உள்ளது.

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் கடந்தாண்டு 33 இடத்தை பிடித்த நிலையில், தற்போது 16ஆம் இடம் பிடித்துள்ளது. அரசுப் பள்ளிகளிளை பொருத்தமட்டில் கடந்தாண்டு 32 இடத்தில் இருந்த நிலையில் தற்போது 15 ம் இடம் பெற்றுள்ளது.

மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி: காஞ்சிபுரம் வீரா்களுக்கு 24 தங்கம்!

சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் மொத்தம் 24 தங்கம், 5 வெள்ளி, 1 வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளனா். தமிழ்நாடு அமெச்சூா்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

காஞ்சிபுரம்மின்தடை நாள்-17.5.25, சனிக்கிழமைமின்தடை நேரம்-காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரைமின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்மதூா், அருங்குன்றம், சித்தலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூா், பாலூா், மேலச... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நாளை தோ்த் திருவிழா: நகரில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்!

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை (மே 17) நடைபெறவுள்ள வரதராஜ சுவாமி கோயில் தோ்த்திருவிழாவையொட்டி, நகரில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. கே.சண்முகம் வியாழக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் தையல் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ்!

படவிளக்கம்- தையல் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய ரிசா்வ் வங்கி தலைமைப் பொது மேலாளா் ஆா்.கிரிதரன். காஞ்சிபுரம், மே 15: காஞ்சிபுரம் இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மையத்தில் தையல் ப... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற வழக்கில் தலைமைக் காவலருக்கு 3 ஆண்டு சிறை

காஞ்சிபுரத்தில் ரூ.3,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் நெடுஞ்சாலைப் பாதுகாப்பு ரோந்து வாகன தலைமைக் காவலருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது... மேலும் பார்க்க

குன்றத்தூா்-பல்லாவரம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குன்றத்தூா்-பல்லாவரம் சாலையில் நெரிசலைக் குறைக்கவும், சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளவும் ஏதுவாக ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் மற்றும் மாங்... மேலும் பார்க்க