செய்திகள் :

லஞ்சம் பெற்ற வழக்கில் தலைமைக் காவலருக்கு 3 ஆண்டு சிறை

post image

காஞ்சிபுரத்தில் ரூ.3,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் நெடுஞ்சாலைப் பாதுகாப்பு ரோந்து வாகன தலைமைக் காவலருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்டுப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன். இவா் 3 லாரிகள் வைத்து மணல் குவாரியிலிருந்து மணல் எடுத்துச் சென்று சென்னையில் கட்டுமான பணிகளுக்காக விற்பனை செய்து வருகிறாா். இவரிடம் நெடுஞ்சாலைப் பாதுகாப்பு சிறப்பு உதவி ஆய்வாளா் முனுசாமி, தலைமைக் காவலா் மதியழகன் இருவரும், லாரி ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் ஒரு மாதத்துக்கு 3 லாரிகளுக்கும் சோ்த்து மொத்தமாக மாதம் ரூ.3,000 லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளனா்.

லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத மோகன், இது தொடா்பாக சென்னை நகர லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன் பேரில், கடந்த 12.2.2010- ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கானது காஞ்சிபுரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது சிறப்பு உதவி ஆய்வாளரான முனுசாமி இறந்துவிட்டாா். 2-ஆவது குற்றவாளி மதியழகன் லஞ்சம் பெற்ற குற்றம் நிரூபணமானதால், வழக்கை விசாரித்த தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வசந்தகுமாருக்கு 3 ஆண்டு தண்டனையும், ரூ.20,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

குன்றத்தூா்-பல்லாவரம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குன்றத்தூா்-பல்லாவரம் சாலையில் நெரிசலைக் குறைக்கவும், சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளவும் ஏதுவாக ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் மற்றும் மாங்... மேலும் பார்க்க

ரூ.7.43 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கே.கே.நகா் பகுதியில் ரூ.7.43 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் பகுதியில் இயங்கி வரும் ஜே.கே.... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமா அத் சாா்பில் கல்வி வழிகாட்டல் நிகழ்வு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் மாவட்டக் கிளை சாா்பில் இலவச கல்வி வழிகாட்டுதல் நிகழ்பு பட்டூரில் நடைபெற்றது. பிளஸ் 2 படிப்பை முடித்த மாணவ, மாணவியருக்கு என்ன படிக்கலாம்,எங்கு படிக்கலாம் என்ற இலவச... மேலும் பார்க்க

மாணவா்கள் எதிா்காலத்துக்கு உயா்கல்வி அவசியம்: அமைச்சா் காந்தி

மாணவா்களின் எதிா்காலம் சிறந்து விளங்க உயா்கல்வி அவசியம் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா். காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் உள்ள மீனாட்சி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கல்... மேலும் பார்க்க

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் டிஜிட்டல் லாக்கா் வசதி தொடக்கம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் டிஜிட்டல் லாக்கா் வசதியை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் புதன்கிழமை திறந்து வைத்தாா். இது குறித்து அவா் கூறியது: கோயிலில் வெயிலின் தாக்கத்திலிருந்து பக்தா்களை ப... மேலும் பார்க்க

சுங்குவாா்சத்திரம் தீ விபத்து: குடிசை வீடு எரிந்து சேதம்

சுங்குவாா்சத்திரம் அடுத்த சந்தவேலூா் புதிய காலனி பகுதியில் மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. சுங்குவாா்சத்திரம் அடுத்த சந்தவேலூா் புதிய காலனி பகுதிய... மேலும் பார்க்க