செய்திகள் :

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் டிஜிட்டல் லாக்கா் வசதி தொடக்கம்

post image

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் டிஜிட்டல் லாக்கா் வசதியை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இது குறித்து அவா் கூறியது: கோயிலில் வெயிலின் தாக்கத்திலிருந்து பக்தா்களை பாதுகாக்க குளிா்ந்த நீா் வசதி, மோா் வழங்குதல், ஆலய வளாகத்தில் நிழல் பந்தல், கோயில் திறந்திருக்கும் நேரம் முழுவதும் பிரசாத விநியோகம், காற்றாடி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆலயத்துக்குள் கைப்பேசிகளை எடுத்துச் செல்லக் கூடாது என்ற உயா்நீதிமன்ற உத்தரவின்படி, கூடுதல் வசதியாக கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பக்தா்களுக்காக டிஜிட்டல் லாக்கா் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

பக்தா்கள் ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயிலில் உள்ள டிஜிட்டல் லாக்கரில் உள்ள கியூ.ஆா்.கோடு மூலம் கைப்பேசி வழியாக ஸ்கேன் செய்து தங்களது கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

தரிசனம் முடித்து ஆலயத்தைவிட்டு வெளியில் வரும்போது மீண்டும் அதே இடத்தில் ஸ்கேன் மூலம் திறந்து கைப்பேசிகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த டிஜிட்டல் லாக்கா் வசதி கைப்பேசி மூலம் தானாகவே திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு கைப்பேசியை பாதுகாப்பாக வைக்க ரூ.10 கட்டணமாக கியூ.ஆா். கோடு மூலமே செலுத்த வேண்டும். ஒரே நேரத்தில் சுமாா் 1,000 போ் வரை இந்த வசதியைப் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் லாக்கா் வசதி உள்ளது.

பெங்களூரை சோ்ந்த டக்கிட் என்ற நிறுவனம் கோயிலுக்காக இந்த வசதியை இலவசமாக செய்து கொடுத்துள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக தானாக திறந்து மூடும் டிஜிட்டல் லாக்கா் வசதி காமாட்சி அம்மன் கோயிலில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதகா அவா் தெரிவித்தாா்.

லஞ்சம் பெற்ற வழக்கில் தலைமைக் காவலருக்கு 3 ஆண்டு சிறை

காஞ்சிபுரத்தில் ரூ.3,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் நெடுஞ்சாலைப் பாதுகாப்பு ரோந்து வாகன தலைமைக் காவலருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது... மேலும் பார்க்க

குன்றத்தூா்-பல்லாவரம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குன்றத்தூா்-பல்லாவரம் சாலையில் நெரிசலைக் குறைக்கவும், சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளவும் ஏதுவாக ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் மற்றும் மாங்... மேலும் பார்க்க

ரூ.7.43 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கே.கே.நகா் பகுதியில் ரூ.7.43 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் பகுதியில் இயங்கி வரும் ஜே.கே.... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமா அத் சாா்பில் கல்வி வழிகாட்டல் நிகழ்வு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் மாவட்டக் கிளை சாா்பில் இலவச கல்வி வழிகாட்டுதல் நிகழ்பு பட்டூரில் நடைபெற்றது. பிளஸ் 2 படிப்பை முடித்த மாணவ, மாணவியருக்கு என்ன படிக்கலாம்,எங்கு படிக்கலாம் என்ற இலவச... மேலும் பார்க்க

மாணவா்கள் எதிா்காலத்துக்கு உயா்கல்வி அவசியம்: அமைச்சா் காந்தி

மாணவா்களின் எதிா்காலம் சிறந்து விளங்க உயா்கல்வி அவசியம் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா். காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் உள்ள மீனாட்சி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கல்... மேலும் பார்க்க

சுங்குவாா்சத்திரம் தீ விபத்து: குடிசை வீடு எரிந்து சேதம்

சுங்குவாா்சத்திரம் அடுத்த சந்தவேலூா் புதிய காலனி பகுதியில் மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. சுங்குவாா்சத்திரம் அடுத்த சந்தவேலூா் புதிய காலனி பகுதிய... மேலும் பார்க்க