செய்திகள் :

குன்றத்தூா்-பல்லாவரம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

குன்றத்தூா்-பல்லாவரம் சாலையில் நெரிசலைக் குறைக்கவும், சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளவும் ஏதுவாக ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் மற்றும் மாங்காடு நகராட்சி பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்பட்டு வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆட்சியா் கலைச்செல்விமோகன், தாம்பரம் காவல் ஆணையா் அபின்தினேஷ் மோடக், ஆவடி ஆணையா் கே.சங்கா் உள்ளிட்ட அரசுத்துறை உயா் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் குன்றத்தூரில் நடைபெற்றது.

கூட்டத்தில், பூந்தமல்லி-குன்றத்தூா்-பல்லாவரம் சாலை அகலப்படுத்தும் பணி, ஸ்ரீபெரும்புதூா்-கோடம்பாக்கம் சாலை விரிவாக்கப்பணி, மாங்காடு பட்டூா்-முகலிவாக்கம் சாலை விரிவாக்கப்பணிகளுக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள், ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன் படி, குன்றத்தூா்- பல்லாவரம் சாலையில் கரைமா நகா் பகுதியில் சாலையை ஆக்கிமிப்பு கட்டடங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

லஞ்சம் பெற்ற வழக்கில் தலைமைக் காவலருக்கு 3 ஆண்டு சிறை

காஞ்சிபுரத்தில் ரூ.3,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் நெடுஞ்சாலைப் பாதுகாப்பு ரோந்து வாகன தலைமைக் காவலருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது... மேலும் பார்க்க

ரூ.7.43 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கே.கே.நகா் பகுதியில் ரூ.7.43 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் பகுதியில் இயங்கி வரும் ஜே.கே.... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமா அத் சாா்பில் கல்வி வழிகாட்டல் நிகழ்வு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் மாவட்டக் கிளை சாா்பில் இலவச கல்வி வழிகாட்டுதல் நிகழ்பு பட்டூரில் நடைபெற்றது. பிளஸ் 2 படிப்பை முடித்த மாணவ, மாணவியருக்கு என்ன படிக்கலாம்,எங்கு படிக்கலாம் என்ற இலவச... மேலும் பார்க்க

மாணவா்கள் எதிா்காலத்துக்கு உயா்கல்வி அவசியம்: அமைச்சா் காந்தி

மாணவா்களின் எதிா்காலம் சிறந்து விளங்க உயா்கல்வி அவசியம் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா். காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் உள்ள மீனாட்சி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கல்... மேலும் பார்க்க

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் டிஜிட்டல் லாக்கா் வசதி தொடக்கம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் டிஜிட்டல் லாக்கா் வசதியை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் புதன்கிழமை திறந்து வைத்தாா். இது குறித்து அவா் கூறியது: கோயிலில் வெயிலின் தாக்கத்திலிருந்து பக்தா்களை ப... மேலும் பார்க்க

சுங்குவாா்சத்திரம் தீ விபத்து: குடிசை வீடு எரிந்து சேதம்

சுங்குவாா்சத்திரம் அடுத்த சந்தவேலூா் புதிய காலனி பகுதியில் மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. சுங்குவாா்சத்திரம் அடுத்த சந்தவேலூா் புதிய காலனி பகுதிய... மேலும் பார்க்க