செய்திகள் :

போலீஸாரை சுட்டுவிட்டு தப்ப முயன்ற ரௌடியை சுட்டுப் பிடித்த போலீஸார்!

post image

அன்னூர்: கோவை அருகே நாட்டுத் துப்பாக்கியால் போலீஸாரை சுட முயன்ற ரௌடியை போலீஸார் புதன்கிழமை சுட்டுப் பிடித்தனர்.

கோவை மாவட்டம், கோவில்பாளையம் வெள்ளானைப்பட்டி சாலையில் செரையாம்பாளையம் அருகே உள்ள மதுக்கூடத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் செவ்வாய்க்கிழமை மது அருந்தியுள்ளார்.

அதே மதுக்கூடத்தில் கோவை சரவணம்பட்டி காபிக்கடை பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் மகன் ஹரிஸ்ரீ (23) என்பவரும் மது அருந்தியுள்ளார். மது அருந்திவிட்டு இருவரும் வெளியே வந்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஹரிஸ்ரீ தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு சக்திவேலை மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் சக்திவேல் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஹரிஸ்ரீயை புதன்கிழமை கைது செய்தனர். பின்னர், அவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை மீட்பதற்காக ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்

அப்போது, போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ஹரிஸ்ரீ, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீஸாரை நோக்கிச் சுட்டுள்ளார். அப்போது, தற்காப்புக்காக ஆய்வாளர் இளங்கோ, ஹரிஸ்ரீயின் காலில் சுட்டுள்ளார்.

இதையடுத்து, காயமடைந்த ஹரிஸ்ரீயை மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன், கோவில்பாளையம் ஆய்வாளர் இளங்கோ, சூலூர் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை, சூலூர் வட்டாட்சியர் சரண்யா ஆகியோர் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் நேரில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.

இவர் மீது பீளமேடு காவல் நிலையத்தில் ஆயுத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பண்ருட்டி: 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நுண் கற்காலக் கற்கருவி கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.இதைக் குறித்து தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது:நுண் கற்காலக் கருவியின் பய... மேலும் பார்க்க

மனைவியின் கள்ளக்காதல் மாமியார் உள்பட 3 பேரை கொன்று கணவர் வெறிச்செயல்

ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த மனைவி செய்த கள்ளக்காதல் துரோகத்தை தாங்க முடியாத கணவர் மாமியார், சித்தப்பா, சித்தி ஆகிய 3 பேரையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்ப... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மோதி 15 மாடுகள் பலி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மோதி 15 நாட்டு மாடுகள் பலியானது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தனசேகரன். நாட்டு மாடுகளை வளர்த்து வரும் இவர், பெரியகுள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் குறிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஆளுநரின் வழக்கு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி கூடுதல் விளக்கம் கேட்டிருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்ட குடியரசுத் தலைவர்!

புது தில்லி: தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அ... மேலும் பார்க்க

கடலூர் சிப்காட்டில் கழிவுநீர் டேங்க் வெடித்து விபத்து: 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

கடலூர் சிப்காட்டில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத கழிவுநீர் டேங்க் திடீரென வெடித்தில் 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், முதுநகர் அருகே உள்ள சிப்கா... மேலும் பார்க்க