செய்திகள் :

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து!

post image

விழுப்புரம் : பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் குறிப்பிட்ட நாள்களில் பகுதியளவில் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளின் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, விழுப்புரத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி விழுப்புரத்திலிருந்து காலை 5.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் (வண்டி எண். 16854), மே 18,20,21,22,25,27,28,29, ஜூன் 1,3 ஆகிய தேதிகளில் காட்பாடி - திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக விழுப்புரத்திலிருந்து காட்பாடி வரை மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும்.

எதிர்வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி -விழுப்புரம் விரைவு ரயில் (வண்டி ண்.16853), மே 18,20,21,22,25,27,28,29, ஜூன் 1, 3 ஆகிய தேதிகளில் திருப்பதி -காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்த விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வாழு, வாழவிடு! ஆர்த்தி குடும்பத்தைக் கடுமையாகச் சாடிய ரவி மோகன்!

மதுரையில் மழையால் வானில் சுமார் 1 மணி நேரம் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கம்!

மதுரை: மதுரையில் இன்று(மே 15) கொட்டித் தீர்த்த பலத்த மழையால், மதுரை விமான நிலையத்தில் மழை நீர் தேங்கியிருந்தது. விமான ஓடுபாதையில் மழைநீர் வடியாததால் விமான சேவை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இந்த ... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கை: அனைத்துப் பாடப்பிரிவினரும் சேரலாம்!

இனிமேல் பிளஸ் 2-வில் எந்த பாடப் பிரிவை எடுத்து படித்திருந்தாலும் பாலிடெக்னிக் படிப்பில் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தொழில் நுட்பக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் உள... மேலும் பார்க்க

குரூப் 1 தேர்வு முடிவு: இறுதி பட்டியல் வெளியானது!

குரூப் 1 தேர்வின் கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், இறுதி பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பணியி... மேலும் பார்க்க

அமித் ஷா அழைக்காதது வருத்தமே: ஓபிஎஸ்

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று((மே 15) செய்தியாளர்களைச... மேலும் பார்க்க

பாஜகவுடன் கூட்டணி கிடையாது: தவெக

நிச்சயமாக பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று தவெக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் துணைப் பொ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றங்கள் அதிகரித்துள்ளன: நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு மாநில அரசுதான் முழு பொறுப்பு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் திருச... மேலும் பார்க்க