சுவென் லைஃப் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!
விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து!
விழுப்புரம் : பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் குறிப்பிட்ட நாள்களில் பகுதியளவில் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளின் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, விழுப்புரத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்படி விழுப்புரத்திலிருந்து காலை 5.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் (வண்டி எண். 16854), மே 18,20,21,22,25,27,28,29, ஜூன் 1,3 ஆகிய தேதிகளில் காட்பாடி - திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக விழுப்புரத்திலிருந்து காட்பாடி வரை மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும்.
எதிர்வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி -விழுப்புரம் விரைவு ரயில் (வண்டி ண்.16853), மே 18,20,21,22,25,27,28,29, ஜூன் 1, 3 ஆகிய தேதிகளில் திருப்பதி -காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்த விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வாழு, வாழவிடு! ஆர்த்தி குடும்பத்தைக் கடுமையாகச் சாடிய ரவி மோகன்!