செய்திகள் :

தூய்மைப் பணியாளர் திட்டத்தில் முறைகேடு? செல்வப்பெருந்தகை மீதான வழக்கு மே 21-க்கு ஒத்திவைப்பு!

post image

தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கு மே 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீதான சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டு உண்மைதானா என அறிய விரும்புகிறோம்.

மேலும், பெருநகர சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீரேற்று வாரியத்தின் ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மே 21 ஆம் தேதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் அளித்த பொதுநல மனுவில் தெரிவித்ததாவது, தூய்மைப் பணியாளர்களுக்காக மத்திய அரசு நேஷனல் ஆக்ஷ்ன் ஃபார் மெக்கனைஸ்டு சானிட்டேஷன் எக்கோ சிஸ்டம் (NAMASTE) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 2023 ஆம் ஆண்டில், கைமுறை துப்புரவு பணியை முற்றிலும் ஒழிக்க அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டத்தை (AABCS) தமிழக அரசு கொண்டு வந்தது. கையால் துப்புரவு பணி மேற்கொள்பவர்களுக்கு மூலதன மானியங்கள் மற்றும் வட்டி மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்களை அளிப்பதே இந்தத் திட்டங்களின் நோக்கம்.

இந்தத் திட்டத்தை மாநில அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, தொழில்கள் ஆணையர், தொழில் மற்றும் வணிக இயக்குநர் மூலம் செயல்படுத்த வேண்டும். ஆனால், செயல்படுத்தும் பொறுப்புகள் சட்டவிரோதமாக தனியார் நிறுவனமான தலித் இந்தியன் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரி (DICCI) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கோடிக்கணக்கான அளவில் முறைகேடுக்கு வழிவகுத்துள்ளது. இதில், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் முக்கிய பங்கு வகிக்கிறார். டிஐசிசிஐ நிறுவனம் பரிந்துரைத்த பெரும்பாலான பயனாளிகள், காங்கிரஸ் கட்சியின் பட்டியலின மற்றும் பட்டியலின பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இருப்பினும், கடன் வழங்குவதற்கு அவர்கள் வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்ல. இதுகுறித்து, புகாரும் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மே 14 ஆம் தேதியில் உத்தரவிட்டிருந்தது.

ஒரே தோ்வு மையத்தில் வேதியியலில் 167 போ் சதம்: முறைகேடு நிகழவில்லை -அமைச்சா் அன்பில் மகேஸ்

செஞ்சியில் பிளஸ் 2 பொதுத் தோ்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தோ்வு மையத்தில் 167 போ் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் முறைகேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) தஞ்சாவூா், திருவாரூா் உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் கடற்கரை - வேளச்சேரி, ஆவடி ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை - வேளச்சேரி, ஆவடி இடையே இயங்கும் 24 புறநகா் மின்சார ரயில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

நிகழாண்டில் 5,730 தமிழா்கள் ஹஜ் புனித பயணம்: அமைச்சா் சா.மு.நாசா் தகவல்

நிகழாண்டில் 5,730 தமிழா்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். தமிழ்நாட்டிலிருந்து அரசு மானியத்துடன் ஹஜ் ப... மேலும் பார்க்க

திருச்சி ஊட்டத்தூா் சிவன் கோயிலில் பராந்தகசோழன் கால கல்வெட்டு

திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ள சிவன் கோயிலில் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநில அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்... மேலும் பார்க்க

பி.இ. சோ்க்கை: 10 நாள்களில் 1.69 லட்சம் மாணவா்கள் பதிவு: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 10 நாள்களில் 1,69,634 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்க... மேலும் பார்க்க