பொதுத் தோ்வுகளில் சாதிக்கும் கெக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளி!
மீதமுள்ள போட்டிகளுக்கான பயிற்சியை நாங்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை: கேகேஆர் வீரர்
ஐபிஎல் மீண்டும் தொடங்கும் எனத் தெரிந்ததால் நாங்கள் பயிற்சியை ஒருபோதும் நிறுத்தவில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றமான சூழல் முடிவுக்கு வந்ததையடுத்து, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நாளை (மே 17) முதல் நடத்தப்பட உள்ளன.
இதையும் படிக்க: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடாதீர்கள்: முன்னாள் ஆஸி. வீரர்
பயிற்சியை நிறுத்தவில்லை
ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் நாளை முதல் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கப்படும் எனத் தெரிந்ததால் நாங்கள் ஒருபோதும் பயிற்சியை நிறுத்தவில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது எங்களை பெரிதாக பாதிக்கவில்லை. ஏனெனில், தொழில்முறை கிரிக்கெட் வீரர்களான எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரிந்திருந்தது. ஐபிஎல் தொடர் மீண்டும் கண்டிப்பாக தொடங்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், எப்போது தொடங்கும் என்பதுதான் எங்களுக்குத் தெரியாமல் இருந்தது. குறுகிய இடைவெளியிலேயே போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளது சிறப்பான விஷயம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ஒட்டுமொத்த அணியும் இங்கு இருக்கிறோம். அடுத்து விளையாடவுள்ள போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இனிவரும் போட்டிகளில் கொல்கத்தா அணி தோல்வியடையக் கூடாது. எங்களுக்கு நடப்பு ஐபிஎல் தொடர் சிறப்பாக அமைந்திருக்கலாம். தொடரின் நடுவில் சில போட்டிகளில் தோல்வியடைந்தோம். இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே எங்களுக்கு மீதமிருக்கின்றன. அனைவரும் சிறப்பாக செயல்பட்டு அந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் பயிற்சியை ஒருபோதும் நிறுத்தவில்லை என்றார்.
இதையும் படிக்க: தில்லி கேபிடல்ஸுக்காக முஸ்தஃபிசூர் ரஹ்மான் விளையாடுவது உறுதி!
ஒரு வார இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் நாளை (மே 17) பெங்களூருவில் நடைபெறவுள்ள போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.