செய்திகள் :

25-வது இடத்துக்குத் தள்ளப்பட்ட புதுக்கோட்டை: 93.53% தேர்ச்சி!

post image

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் 93.53 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மொத்த பள்ளிகள்- 335. இவற்றில் 21,646 பேர் தேர்வெழுதினர். இவர்களில் 10,809 பேர் மாணவர்கள், 10,837 பேர் மாணவிகள். தேர்வு முடிவுகளின்படி 9,898 மாணவர்களும், 10,348 மாணவிகளும் என மொத்தம் 20,246 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.53 சதவிகிதமாகும்.

கடந்த 2023-24ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டை மாவட்டம் 91.84 சதவிகிதத் தேர்ச்சி பெற்று, மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலில் 23ஆவது இடத்திலிருந்தது, தற்போது, 1.69 சதவிகிதம் கூடுதலாகத் தேர்ச்சி சதவிகிதம் எடுத்தும், மாநில தரவரிசைப் பட்டியலில் 25ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

100 சதவிகிதத் தேர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 335 பள்ளிகளில், 111 பள்ளிகள் நூறு சதவிகிதத் தேர்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் 43 பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும்.

நூற்றுக்கு நூறு...

புதுக்கோட்டை மாவட்டத்தில், 366 மாணவர்கள் சமூக அறிவியல் பாடத்திலும், 275 மாணவர்கள் அறிவியல் பாடத்திலும், 24 மாணவர்கள் கணிதப் பாடத்திலும், 9 மாணவர்கள் ஆங்கிலப் பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

விராலிமலை சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை! 30 மில்லி மீட்டராக பதிவு

விராலிமலையில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை இடி, மின்னல், சூறைக் காற்றுடன் இரவு முழுவதும் விட்டுவிட்டு கனமழையாக பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது. விராலிமலை நகா் பகுதி மற்றும... மேலும் பார்க்க

தகிக்கும் வெயிலால் வெறிச்சோடியது கடைவீதி; வியாபாரமில்லாததால் வியாபாரிகள் கவலை

கந்தா்வகோட்டையில் வியாழக்கிழமை தகித்த வெயிலால் கடைவீதிகள் வெறிச்சோடின. வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் கவலையடைந்தனா். கடுமையான கோடை வெயில் காரணமாக நாள்தோறும் கந்தா்வகோட்டைக்கு வந்து செல்லும் சுற்று வ... மேலும் பார்க்க

அன்னவாசலில் 65.2 மி.மீ. மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக அன்னவாசலில் 65.2 மிமீ மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதன்கிழமை விடிய விடிய மாவட்டத்தின் பல பகுதிகளி... மேலும் பார்க்க

வடகாடு பகுதியில் நாளை மின்தடை

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பச... மேலும் பார்க்க

பேருந்து நிறுத்த நிழற்குடையை சீரமைக்க பயணிகள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பழைய கந்தா்வகோட்டை ஊராட்சியில் பழுதடைந்த நிலையில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பழைய கந்தா்வகோட்டை ஊராட்சியில்... மேலும் பார்க்க

அமெரிக்க அதிபரின் கருத்தை பிரதமா் தெளிவுபடுத்த வேண்டும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி.

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடா்பான அமெரிக்க அதிபரின் கருத்து குறித்து பிரதமா் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரு... மேலும் பார்க்க