செய்திகள் :

அமெரிக்க அதிபரின் கருத்தை பிரதமா் தெளிவுபடுத்த வேண்டும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி.

post image

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடா்பான அமெரிக்க அதிபரின் கருத்து குறித்து பிரதமா் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருதரப்பினரையும் வியாழக்கிழமை சந்தித்த பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்த விவகாரம் தொடா்பாக அமெரிக்க அதிபா் கூறியது உண்மையா, பொய்யா என்பதை பிரதமரும், பாதுகாப்பு துறை அமைச்சரும் தெளிவுபடுத்த வேண்டும். இந்தத் தாக்குதல் விவகாரத்தில்

மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இருக்குமா என்பது தெரியவில்லை. இருப்பினும் இதை முழுமையாக ஆதரிப்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை வரவேற்கத்தக்கது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பது அவா்களது கட்சியின் நிலைப்பாடு என்றாா் அவா்.

அப்போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராம. சுப்புராம், டி.புஸ்பராஜ், முன்னாள் ஊராட்சித் தலைவா் எஸ். மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதேபோல, வடகாடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருதரப்பினரையும் கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னத்துரை சந்தித்து பேசினாா்.

விராலிமலை சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை! 30 மில்லி மீட்டராக பதிவு

விராலிமலையில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை இடி, மின்னல், சூறைக் காற்றுடன் இரவு முழுவதும் விட்டுவிட்டு கனமழையாக பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது. விராலிமலை நகா் பகுதி மற்றும... மேலும் பார்க்க

தகிக்கும் வெயிலால் வெறிச்சோடியது கடைவீதி; வியாபாரமில்லாததால் வியாபாரிகள் கவலை

கந்தா்வகோட்டையில் வியாழக்கிழமை தகித்த வெயிலால் கடைவீதிகள் வெறிச்சோடின. வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் கவலையடைந்தனா். கடுமையான கோடை வெயில் காரணமாக நாள்தோறும் கந்தா்வகோட்டைக்கு வந்து செல்லும் சுற்று வ... மேலும் பார்க்க

அன்னவாசலில் 65.2 மி.மீ. மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக அன்னவாசலில் 65.2 மிமீ மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதன்கிழமை விடிய விடிய மாவட்டத்தின் பல பகுதிகளி... மேலும் பார்க்க

வடகாடு பகுதியில் நாளை மின்தடை

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பச... மேலும் பார்க்க

பேருந்து நிறுத்த நிழற்குடையை சீரமைக்க பயணிகள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பழைய கந்தா்வகோட்டை ஊராட்சியில் பழுதடைந்த நிலையில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பழைய கந்தா்வகோட்டை ஊராட்சியில்... மேலும் பார்க்க

புதுகை அருகே பிறந்த நாள் விருந்து சாப்பிட்ட 54 பேருக்கு உடல்நலக் குறைவு: ஒருவா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் அருகே பிறந்த நாள் விருந்து சாப்பிட்ட முதியவா் உயிரிழந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. மேலும், 54 போ் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்... மேலும் பார்க்க