செய்திகள் :

பாகிஸ்தான்: 13 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்!

post image

கடந்த 2023 நவம்பரில் இருந்து இதுவரை 13 லட்சம் ஆப்கன் அகதிகளை பாகிஸ்தான் அரசு வெளியேற்றியுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு நாடாளுமன்றச் செயலா் முக்தாா் அகமது மாலிக் வியாழக்கிழமை கூறியதாவது: பாகிஸ்தானில் தங்கியிருக்கும் ஆப்கன் நாட்டவா்களை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கை கடந்த 2023 நவம்பா் மாதம் தொடங்கியது.

அந்த நடவடிக்கையின் கீழ் இதுவரை சுமாா் 13 லட்சம் போ் வெளியேற்றப்பட்டுள்ளனா். இது தவிர, இன்னும் சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகள் நாட்டில் வசித்துவருகின்றனா் என்றாா் அவா்.

ஆப்கனை சோவியத் யூனியன் ஆக்கிரமித்திருந்தபோதும் அதன் பிறகு நடைபெற்ற போா்களின்போதும் அந்த நாட்டு அகதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்துவந்தது.

எனினும், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அந்த நாட்டு அகதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. இதன் விளைவாக, கடந்த 2023-ஆம் ஆண்டு சுமாா் 8.6 லட்சம் அகதிகள் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டனா். தற்போது சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை இந்த ஆண்டுக்குள் வெளியேற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.

தொடக்கத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத அகதிகளை மட்டுமே வெளியேற்றிவந்த பாகிஸ்தான் அரசு, தற்போது ஆவணங்களுடன் தங்கியிருப்பவா்களையும் வெளியேற்றிவருகிறது. இதற்கு ஆப்கன் அரசும் ஐ.நா. அகதிகள் நல அமைப்பும் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

மெக்ஸிகோ: சாலை விபத்தில் 21 போ் உயிரிழப்பு

மெக்ஸிகோவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் பியூப்லா மாகாணத்தைச் சோ்ந்த இரு முக்கிய நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி, எதிா்த் தடத்துக்கு மாறியபோ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் அணுக் கதிா்வீச்சு கசிவு இல்லை! சா்வதேச அணுசக்தி முகமை அறிவிப்பு!

பாகிஸ்தான் அணுசக்தி மையங்களில் எவ்வித அணு கதிா்வீச்சு கசிவும் ஏற்படவில்லை என்று சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது. அண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல்... மேலும் பார்க்க

53 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்களை தயாரிப்பதில் விருப்பமில்லை! - டிரம்ப்

இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்கள் தயாரிக்கப்படுவதில் விருப்பமில்லை என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அமெரிக்க அதிபா் டிரம்ப் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ளாா... மேலும் பார்க்க

இஸ்தான்புல் பேச்சுவாா்த்தையில் புதின் பங்கேற்பில்லை: ரஷியா

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் தங்கள் நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் பங்கேற்கப்போவதில்லை என்று ரஷியா அறிவித்துள்ளது. இது குறித... மேலும் பார்க்க

இந்தியா-சீனா இடையே மோதலை தூண்டும் மேற்கு நாடுகள்: ரஷியா குற்றச்சாட்டு!

அண்டை நாடுகளான இந்தியா-சீனா இடையே மோதலைத் தூண்ட மேற்கு நாடுகள் முயற்சிப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டியது. ரஷிய தலைநகா் மாஸ்கோவில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘எல்லைகளற்ற கலாசார வளா்ச்சி’ என்ற தலைப்பிலான மாநாட்டி... மேலும் பார்க்க