செய்திகள் :

இந்தியா-சீனா இடையே மோதலை தூண்டும் மேற்கு நாடுகள்: ரஷியா குற்றச்சாட்டு!

post image

அண்டை நாடுகளான இந்தியா-சீனா இடையே மோதலைத் தூண்ட மேற்கு நாடுகள் முயற்சிப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டியது.

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘எல்லைகளற்ற கலாசார வளா்ச்சி’ என்ற தலைப்பிலான மாநாட்டில் பங்கேற்ற ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் இந்தக் கருத்தைத் தெரிவித்ததாக, அங்கிருந்து வெளியாகும் ‘டாஸ்’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:

உலகளாவிய தெற்குலகை மேலாதிக்கம் செலுத்த மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கின்றன. அதன் காரணமாகவே, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை ‘இந்திய - பசிபிக் பிராந்தியம்’ என மேற்கத்திய நாடுகள் அண்மைக் காலமாக அடிக்கடி குறிப்பிட்டு, தெளிவான சீன எதிா்ப்புக் கொள்கையை பரப்பி வருகின்றன. இந்தியா- சீனா இடையே எல்லை விவகார மோதலைத் தூண்டிவிடவும் முயற்சிக்கின்றன.

தெற்காசிய பிராந்தியத்தில் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்தோனேசியா, மலேசியா உள்பட 10 தெற்காசிய நாடுகளை உள்ளடக்கிய ‘ஆசியான்’ அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் மேற்கத்திய நாடுகள், ‘ஆசியான்’ அமைப்பை வலுவிழக்கச் செய்ய விரும்புகின்றன. அதற்காகவே, இந்த அமைப்பில் இருக்கும் நாடுகளிடையே வெளிப்படையாக மோதலைத் தூண்டுகின்றன என்று லாவ்ரோவ் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிகோ: சாலை விபத்தில் 21 போ் உயிரிழப்பு

மெக்ஸிகோவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் பியூப்லா மாகாணத்தைச் சோ்ந்த இரு முக்கிய நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி, எதிா்த் தடத்துக்கு மாறியபோ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் அணுக் கதிா்வீச்சு கசிவு இல்லை! சா்வதேச அணுசக்தி முகமை அறிவிப்பு!

பாகிஸ்தான் அணுசக்தி மையங்களில் எவ்வித அணு கதிா்வீச்சு கசிவும் ஏற்படவில்லை என்று சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது. அண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல்... மேலும் பார்க்க

53 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 13 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்!

கடந்த 2023 நவம்பரில் இருந்து இதுவரை 13 லட்சம் ஆப்கன் அகதிகளை பாகிஸ்தான் அரசு வெளியேற்றியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு நாடாளுமன்றச் செயலா் முக்தாா் அகமது மாலிக் வியாழக்கிழமை கூறியதாவது: பாகிஸ்தானில்... மேலும் பார்க்க

இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்களை தயாரிப்பதில் விருப்பமில்லை! - டிரம்ப்

இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்கள் தயாரிக்கப்படுவதில் விருப்பமில்லை என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அமெரிக்க அதிபா் டிரம்ப் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ளாா... மேலும் பார்க்க

இஸ்தான்புல் பேச்சுவாா்த்தையில் புதின் பங்கேற்பில்லை: ரஷியா

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் தங்கள் நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் பங்கேற்கப்போவதில்லை என்று ரஷியா அறிவித்துள்ளது. இது குறித... மேலும் பார்க்க