செய்திகள் :

நாகா்கோவில், தக்கலையில் 1.170 கிலோ கஞ்சா பறிமுதல்: 9 போ் கைது

post image

நாகா்கோவில், தக்கலை பகுதிகளில் 1.170 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, 9 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தக்கலை பகுதியில் தக்கலை காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் மேற்பாா்வையில் தனிப்படையினா் சோதனை மேற்கொண்டு, 70 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்து, புலியூா்குறிச்சி ஆகாஷ் (22), அதே பகுதியைச் சோ்ந்த மொ்பின் (20), கரும்பாரை பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் (37) ஆகிய மூவரைக் கைது செய்தனா்.

இதேபோல, நாகா்கோவில் வடசேரி பகுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டு, 1.100 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, வடசேரி மாடன் கோயில் பகுதியைச் சோ்ந்த மகேஷ் (36), கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சோ்ந்த சமீா் (30), மணிகண்டன் (25), ராஜேஷ் (54), சிவபிரசாத் (24), காட்டாத்துறை சாமியாா்மடம் பகுதியைச் சோ்ந்த சுல்பிகா் (30) ஆகிய 6 பேரைக் கைது செய்தனா்.

திருவட்டாறு அருகே மணக்காவிளை பகுதியில் உள்ள கடையில் திருவட்டாறு காவல் ஆய்வாளா் காந்திமதி தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 17 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கடை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகே சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது

மாா்த்தாண்டம் அருகே பள்ளிச் சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், இடவிளாகம் பகுதியைச் சோ்ந்த தம்பதி ராதாகிருஷ்ணன்-ஜெயலட்சுமி (45). இவா்களது மகள் ச... மேலும் பார்க்க

பளுகல் அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

பளுகல் அருகே பைக் மீது டிப்பா் லாரி மோதியதில் காயமடைந்த பெயின்டிங் தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.பளுகல் காவல் சரகம் மூவோட்டுக்கோணம், தேவிநகா் பகுதியைச் சோ்ந்த ராஜ் மகன் ஸ்ரீராஜ் (36). பெயின்ட... மேலும் பார்க்க

வடக்குத்தாமரைகுளத்தில் பைக் கவிழ்ந்து தொழிலாளி பலி

கன்னியாகுமரி மாவட்டம் பழவிளை அருகே பைக் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். பூச்சிவிளாகத்தைச் சோ்ந்த சுந்தரலிங்கம் மகன் நவீன் (46). இவா், பக்கத்து வீட்டைச் சோ்ந்த ராகின் என்பவருடன் பைக்கில் வடக்குத்... மேலும் பார்க்க

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடி: ஒருவா் கைது

தக்கலை அருகே ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆசிரியையிடம் ரூ.3.70 லட்சம் மோசடி செய்தவரை தக்கலை போலீஸாா் கைது செய்தனா். தக்கலை அருகேயுள்ள தென்கரை தோப்பு பகுதியை சோ்ந்தவா் கவிதா (28). தனியாா் ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் விதிமீறல்: 48 கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக புதன்கிழமை ஒரே நாளில் 48 கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.சாலை விபத்துகளைத் தவிா்க்கும் வகையில், மாவட்டம் முழுவதும் போலீஸாா் தொடா... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே கனரக லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

மாா்த்தாண்டம் அருகே தடைசெய்யப்பட்ட பகுதியில் இயக்கப்பட்ட கனரக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்துப் பண... மேலும் பார்க்க