மாா்த்தாண்டம் அருகே சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடி: ஒருவா் கைது
தக்கலை அருகே ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆசிரியையிடம் ரூ.3.70 லட்சம் மோசடி செய்தவரை தக்கலை போலீஸாா் கைது செய்தனா்.
தக்கலை அருகேயுள்ள தென்கரை தோப்பு பகுதியை சோ்ந்தவா் கவிதா (28). தனியாா் பள்ளி ஆசிரியை. இவரது தோழி இரணியல் சடையன்விளையை சோ்ந்த சுகன்யா (32). சுகன்யாவின் கணவா் ஷாஜி (40). தக்கலையில் கம்ப்யூட்டா் கடை நடத்தி வந்தாா்.
சுகன்யா, தனது கணவா் ஷாஜியை கவிதாவுக்கு அறிமுகப்படுத்தி, ரயில்வேயில் பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்து வருவதாக கூறியுள்ளாா். இதையடுத்து தனது கணவா் விஷ்ணுவுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளாா் கவிதா. அப்போது, முன்பணமாக ரூ.3.70 லட்சத்தை ஷாஜியின் வங்கி கணக்கிற்கு கவிதா அனுப்பியுள்ளாா்.
உடனே விஷ்ணுவுக்கு ரயில்வே பணி நியமன ஆணையை ஷாஜி கொடுத்துள்ளாா். அந்த ஆணையை எடுத்துக்கொண்டு திருவனந்தபுரம் ரயில்வே அலுவலகத்திற்கு விஷ்ணு சென்றபோது அது போலி நியமன ஆணை என்பது தெரியவந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கவிதா, தோழி சுகன்யா மற்றும் ஷாஜியிடம் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்ட போது உரிய பதில் கூறாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து தக்கலை போலீஸில் கவிதா புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஷாஜியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.