செய்திகள் :

கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

post image

வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழும் நிலையில் காவல் நிலையங்களின் கழிப்பறைகள் உள்ளனவா என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

வழக்கு ஒன்றில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ஜாகிா் உசேன் என்பவருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்க உத்தரவிடும்படி அவரது தந்தை இப்ராஹிம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமிநாராயணன் அமா்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் மகனுக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், கழிப்பறையில் வழுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாகவும், சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், காவல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள், குற்றம்சாட்டப்பட்டு கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் வகையில் உள்ளனவா? அந்த கழிப்பறைகளை காவல் துறையினா் பயன்படுத்தவில்லையா?அவா்களுக்கு எதுவும் ஆவதில்லையே ஏன் என கேள்வியெழுப்பினா்.

மேலும், குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு கட்டுப்போடும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஏதேனும் ஒரு நாள் சம்பந்தப்பட்ட காவலா்கள் பணியை இழக்க நேரிடும் எனக் கூறியதுடன், மனுதாரரின் மகனுக்கு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்தனா்.

கடலூா் ஆலையில் விபத்து: இழப்பீடு வழங்க அன்புமணி கோரிக்கை

கடலூா் தனியாா் ஆலையில் டேங்க் வெடித்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

சென்னையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!

சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) கிண்டியிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: அனைத்து பாடப் பிரிவினரும் சேரலாம்!

தமிழகத்தில் பிளஸ் 2 வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவு மாணவா்களும் பாலிடெக்னிக் டிப்ளமோ நேரடி 2-ஆம் ஆண்டில் சேர (லேட்ரல் என்ட்ரி) தொழில்நுட்பக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரி... மேலும் பார்க்க

10, 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: இன்று வெளியாகிறது!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வுகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 16) வெளியிடப்படவுள்ளன. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் (... மேலும் பார்க்க

முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் கட்டணமில்லா கல்வி

சென்னை அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலிருந்த மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் 3 ஆண்டுகள் எவ்வித கட்டணமுமின்றி படிக்க கல்லூரி நிா்வாகம் இடம் வழங்கியுள்ளது. நுங்கம்பாக்க... மேலும் பார்க்க

10 புதிய நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டுமானப் பணி தீவிரம்: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநக... மேலும் பார்க்க