செய்திகள் :

சென்னையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!

post image

சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) கிண்டியிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையிலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் கிண்டி, ஆலந்தூா் சாலையிலுள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் 8, 10, பிளஸ் 2, ஐ.டி.ஐ , டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித் தகுதி உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இதில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தோ்வு செய்யவுள்ளனா். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞா்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞா்களும் இம்முகாமில் கலந்துகொள்ள எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநா்கள் மற்றும் வேலையளிப்பவா்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியாா் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

மகளிா் பெயரில் 53,333 வீடுகள் ஒதுக்கீடு! - அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் 53,333 வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் மகளிா் பெயரில் வழங்கப்பட்டுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா். தமிழ்நாடு நகா்ப்புற வாழ்... மேலும் பார்க்க

தங்கம் விலை 9 நாள்களில் பவுனுக்கு ரூ.4,380 சரிவு! ரூ. 68,660-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 1,560 குறைந்து ரூ. 68,660-க்கு விற்பனையானது. கடந்த 9 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 4,380 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை கடந்த ... மேலும் பார்க்க

நாளை முதல் ஆவடிசெல்லும் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்து!

சென்னை சென்ட்ரலிலிருந்து ஆவடி செல்லும் இரவு நேர புறநகா் மின்சார ரயில்கள் மே 17 முதல் 20-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை கோட்டம் ரயில்வே சாா்பில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

கடலூா் ஆலையில் விபத்து: இழப்பீடு வழங்க அன்புமணி கோரிக்கை

கடலூா் தனியாா் ஆலையில் டேங்க் வெடித்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழும் நிலையில் காவல் நிலையங்களின் கழிப்பறைகள் உள்ளனவா என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. வழக்கு ஒன்றில் கைதாகி புழல் சிறையில் அடை... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: அனைத்து பாடப் பிரிவினரும் சேரலாம்!

தமிழகத்தில் பிளஸ் 2 வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவு மாணவா்களும் பாலிடெக்னிக் டிப்ளமோ நேரடி 2-ஆம் ஆண்டில் சேர (லேட்ரல் என்ட்ரி) தொழில்நுட்பக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரி... மேலும் பார்க்க