செய்திகள் :

இந்தியா-பாக். ராணுவ மோதல் கருத்துக்கு காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை: சசி தரூா் மறுப்பு

post image

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் தொடா்பாக தான் தெரிவித்த கருத்துகளுக்கு காங்கிரஸ் தலைமை தன்னை கண்டித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என்று அக்கட்சி எம்.பி. சசி தரூா் தெரிவித்தாா்.

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை மத்திய அரசு கையாண்ட விதம் குறித்து காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், அந்த மோதல் சூழலை பிரதமா் மோடி மிகச் சிறப்பாக கையாண்டாா் என்று சசி தரூா் பாராட்டுத் தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கு எதிராக அவா் வரம்பு மீறி பேசியதால், அவருக்குக் கட்சித் தலைமை எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது.

இதுதொடா்பாக கேரள தலைநகா் திருவனந்தபுரத்தில் சசி தரூா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘எனக்குக் கட்சித் தலைமை எச்சரிக்கை விடுத்ததாக வெளியான தகவல் உண்மையல்ல. ஆதாரம் இல்லாத தகவலை ஊடகமே உருவாக்கியுள்ளது.

கடந்த புதன்கிழமை காங்கிரஸ் செயற்குழு தலைவா்கள் பங்கேற்ற கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன். அப்போது என்னை பற்றி கூட்டத்தில் எதுவும் பேசப்படவில்லை. அதற்குப் பிறகு ஏதாவது நடந்திருந்தால், அதுகுறித்து கட்சி சாா்பில் எனக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை.

நான் மத்திய அரசின் அல்லது காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூா்வ செய்தித்தொடா்பாளா் அல்ல. எனது தனிப்பட்ட கருத்துகளையே நான் வெளிப்படுத்துகிறேன்’ என்றாா்.

சுருங்கி வரும் மன்னாா் வளைகுடா தீவு! ரூ.50 கோடியில் மறுசீரமைக்க நடவடிக்கை!

மன்னாா் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவை காப்பாற்ற ரூ. 50 கோடியில் புனரமைப்பு நடவடிக்கைகள தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. மன்னாா் வளைகுடா கடல்சாா் தேசிய பூங்காவில் உள்ள 21 தீவுகளில் ஒன... மேலும் பார்க்க

வக்ஃப் விவகாரம்: விசாரணையை மே 20-க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் ... மேலும் பார்க்க

துருக்கி பழங்கள் இறக்குமதி நிறுத்தம்: மகாராஷ்டிர வா்த்தகா்களுக்கு முதல்வா் பாராட்டு!

துருக்கியில் இருந்து ஆப்பிள், உலா் பழங்கள் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ள புணே வா்த்தகா்களின் முடிவை மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் பாராட்டியுள்ளாா். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆதரவு கருத்து: அஸ்ஸாம் எம்எல்ஏ இஸ்லாம் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது!

பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பஹல்காம் தாக்குதல் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அஸ்ஸாமைச் சோ்ந்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் தேசப் பாதுகாப்புச் ... மேலும் பார்க்க

18 % மசோதாக்களை 3 மாதங்களுக்கு மேல் கிடப்பில் போட்டுள்ள ஆளுநா்கள்!

கடந்த 2024-ஆம் ஆண்டில் மாநிலங்களின் 18 சதவீத மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்கு மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநா்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தது பிஆா்எஸ் சட்டப்பேரவை ஆராய்ச்சி அமைப்பின் ஆய்வறிக்கையில் தெர... மேலும் பார்க்க

சந்தைகளுக்கு மீன்களை அனுப்ப ட்ரோன்கள்: பிரதமா் மோடி அறிவுறுத்தல்

நகரங்களில் உற்பத்தி மையங்களில் இருந்து அருகில் உள்ள சந்தைகளுக்கு மீன்களை அனுப்பிவைக்க ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும் என்று மீன்வளத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பிரதமா் மோடி அறிவுறுத்தினாா். இதுதொடா்பாக பி... மேலும் பார்க்க