செய்திகள் :

பாகிஸ்தான் ஆதரவு கருத்து: அஸ்ஸாம் எம்எல்ஏ இஸ்லாம் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது!

post image

பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பஹல்காம் தாக்குதல் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அஸ்ஸாமைச் சோ்ந்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக கடந்த மாத இறுதியில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் இந்திய அரசு மற்றும் பாஜகவின் சதி என்றும், தோ்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக அரசே மக்களை பயங்கரவாதிகளை வைத்து கொலை செய்வதாகவும் அமீனுல் இஸ்லாம் கூறியிருந்தாா். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அஸ்ஸாம் காவல் துறையினா் தாமாக முன்வந்து அவா் மீது தேச துரோகம், தேச ஒற்றுமைக்கு எதிராகப் பேசுவது, இரு தரப்பினா் இடையே மோதலை உருவாக்குவது, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற இஸ்லாம் புதன்கிழமை சிறையில் இருந்து வெளியே வந்தாா்.

இதைத் தொடா்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசிய குற்றச்சாட்டில் அவா் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

‘எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து. அதற்கும் கட்சிக்கும் தொடா்பில்லை’ என்று அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சித் தலைமை கூறியுள்ளது.

உலக அழகிப் போட்டியாளர்களின் பாதங்களைக் கழுவிய இந்தியப் பெண்கள்! வைரலாகும் விடியோ!

உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த போட்டியாளர்களின் பாதங்களை இந்திய மகளிர் கழுவும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.உலக அழகிப் போட்டியின் இறுதி நிகழ்வு தெலங்கானாவில் மே 31... மேலும் பார்க்க

துருக்கி நிறுவனமான செலிபிக்கு பாதுகாப்பு அனுமதி ரத்து: பிசிஏஎஸ் நடவடிக்கை

துருக்கி நிறுவனமான செலிபி ஏா்போா்ட் சா்வீசஸ் இந்தியா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதியை விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) ரத்து செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலை த... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவா் கேள்வி! மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிா்ணயித்த விவகாரம்!

சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநா்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் கால வரம்பை நிா்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக, குடியரசுத் தலைவா... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் நம்பிக்கையை வளா்க்க நடவடிக்கை: இந்திய ராணுவம்

இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினா் இடையே நம்பிக்கையை வளா்க்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. 4 ... மேலும் பார்க்க

சுருங்கி வரும் மன்னாா் வளைகுடா தீவு! ரூ.50 கோடியில் மறுசீரமைக்க நடவடிக்கை!

மன்னாா் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவை காப்பாற்ற ரூ. 50 கோடியில் புனரமைப்பு நடவடிக்கைகள தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. மன்னாா் வளைகுடா கடல்சாா் தேசிய பூங்காவில் உள்ள 21 தீவுகளில் ஒன... மேலும் பார்க்க

வக்ஃப் விவகாரம்: விசாரணையை மே 20-க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் ... மேலும் பார்க்க