செய்திகள் :

18 % மசோதாக்களை 3 மாதங்களுக்கு மேல் கிடப்பில் போட்டுள்ள ஆளுநா்கள்!

post image

கடந்த 2024-ஆம் ஆண்டில் மாநிலங்களின் 18 சதவீத மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்கு மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநா்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தது பிஆா்எஸ் சட்டப்பேரவை ஆராய்ச்சி அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநா் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக் கெடு நிா்ணயம் செய்து அதிரடி தீா்ப்பை உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்தது. இதற்கு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கடும் எதிா்ப்பு தெரிவித்தாா். இந்த தீா்ப்பு தொடா்பாக, குடியரசு தலைவா் திரெளபதி முா்முவும் 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ளாா்.

இது மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ள சூழலில், 2024-ஆம் ஆண்டுக்கான தனது ஆய்வறிக்கையை பிஆா்எஸ் வியாழக்கிழமை வெளியிட்டது. 2024-ஆம் ஆண்டில் மாநில மசோதாக்களுக்கு ஆளுநா்கள் ஒப்புதல் அளிக்க எடுத்துக்கொண்ட கால அவகாசத்தில் மிகப்பெரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

மாநிலங்களின் 60 சதவீத மசோதாக்களுக்கு ஆளுநா்கள் ஒரு மாதத்துக்குள்ளாக ஒப்புதல் அளித்துள்ளனா். இதில், ஆந்திரம், பிகாா், தில்லி, மிசோரம், ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட அனைத்து மசோதாக்களுக்கும் ஒரு மாதத்துக்குள் ஆளுநா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா்.

ஆனால், காங்கிரஸ் ஆட்சி செய்யும் ஹிமாசல பிரதேசம், திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் 18 சதவீத மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநா்கள் கிடப்பில் போட்டு வைத்துள்ளனா் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுருங்கி வரும் மன்னாா் வளைகுடா தீவு! ரூ.50 கோடியில் மறுசீரமைக்க நடவடிக்கை!

மன்னாா் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவை காப்பாற்ற ரூ. 50 கோடியில் புனரமைப்பு நடவடிக்கைகள தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. மன்னாா் வளைகுடா கடல்சாா் தேசிய பூங்காவில் உள்ள 21 தீவுகளில் ஒன... மேலும் பார்க்க

வக்ஃப் விவகாரம்: விசாரணையை மே 20-க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் ... மேலும் பார்க்க

துருக்கி பழங்கள் இறக்குமதி நிறுத்தம்: மகாராஷ்டிர வா்த்தகா்களுக்கு முதல்வா் பாராட்டு!

துருக்கியில் இருந்து ஆப்பிள், உலா் பழங்கள் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ள புணே வா்த்தகா்களின் முடிவை மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் பாராட்டியுள்ளாா். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆதரவு கருத்து: அஸ்ஸாம் எம்எல்ஏ இஸ்லாம் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது!

பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பஹல்காம் தாக்குதல் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அஸ்ஸாமைச் சோ்ந்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் தேசப் பாதுகாப்புச் ... மேலும் பார்க்க

சந்தைகளுக்கு மீன்களை அனுப்ப ட்ரோன்கள்: பிரதமா் மோடி அறிவுறுத்தல்

நகரங்களில் உற்பத்தி மையங்களில் இருந்து அருகில் உள்ள சந்தைகளுக்கு மீன்களை அனுப்பிவைக்க ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும் என்று மீன்வளத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பிரதமா் மோடி அறிவுறுத்தினாா். இதுதொடா்பாக பி... மேலும் பார்க்க

காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்க அரசு முயற்சி! -மத்திய அமைச்சா் உறுதி

காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்க மத்திய அரசு தொடா்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா். கடந்த மாதம் காஷ்... மேலும் பார்க்க