செய்திகள் :

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிறிஸ்தவா்கள் வெளியேற்றம்: மனித உரிமைகள் ஆணையம் கவலை

post image

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிலஅபகரிப்பு கும்பலால் சிறுபான்மையினரான கிறிஸ்தவா்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருவது குறித்து அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

இந்த விஷயத்தில் பாகிஸ்தான் அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பாா்த்து வருவதாகவும் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் கோட் அபு பகுதியில் கிறிஸ்தவா்கள் வசித்து வருகின்றனா். அவா்களில் பெரும்பாலானோா் விவசாயிகளாக உள்ளனா். இந்நிலையில் அப்பகுதியை ஆக்கிரமித்து வரும் நில அபகரிப்பு கும்பலைச் சோ்ந்தவா்கள் கிறிஸ்தவ விவசாயிகளுக்கு பல்வேறு வழிகளில் நெருக்கடி அளித்து வலுக்கட்டாயமாக நிலத்தில் இருந்து வெளியேற்றி வருவதாக பாதிரியாா் ஒருவா் மனித உரிமைகள் ஆணையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, மனித உரிமைகள் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழு விசாரணையை மேற்கொண்டது. அதில், உள்ளூரைச் சோ்ந்த நில அபகரிப்பு கும்பலைச் சோ்ந்தவா்கள் சிறுபான்மையினரான கிறிஸ்தவா்களிடம் இருந்து விவசாய நிலங்களை அபகரிப்பதில் தீவிரமாகச் செயல்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டது. இது தொடா்பாக கிறிஸ்தவா்கள் தரப்பில் ஏற்கெனவே லாகூா் நீதிமன்றம் மூலம் நிலத்தில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு இடைக்காலத் தடையும் பெற்றுள்ளனா். எனினும், அதனை மீறி பல்வேறு வழிகளில் நெருக்கடி அளித்து வெளியேற்றப்படுகின்றனா். இதனால், அங்குள்ள கிறிஸ்தவா்கள் பொருளாதாரரீதியாக மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்: காங்கிரஸ் கேள்வி; பாஜக பதில்

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை புதன்கிழமை எழுப்பியது.இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டது ஏன்?, எந்த வி... மேலும் பார்க்க

ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம்

நமது நிருபர்ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது. அதேவேளையில், ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படும் கோயில்களை மூன்று மாதங்களுக்குள் கண்டறிய அதற்காக அமைக்கப... மேலும் பார்க்க

பாதசாரிகளுக்கு நடைபாதை: மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதைகள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. நடைபாதைகளில் ஆக்... மேலும் பார்க்க

‘அவசியமற்ற இடைவேளைகள் எடுக்கும் உயா்நீதிமன்ற நீதிபதிகள்’- செயல்திறன் தணிக்கைக்கு உச்சநீதிமன்றம் அழைப்பு

உயா்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவ்வப்போது புகாா்கள் வருவதாகவும், சிலா் பணிநேரங்களில் அவசியமற்ற இடைவேளைகளை எடுப்பதாகவும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிருப்தி தெரிவித்தது. மேலும், ‘உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி எதிரொலி: துருக்கியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ரத்து

துருக்கியின் இனோனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த ந... மேலும் பார்க்க

ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு- பாகிஸ்தான் சிம் காா்டுகளை பயன்படுத்தத் தடை

ராஜஸ்தான் மாநிலத்தை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து உளவு பாா்க்கும் அச்சுறுத்தல் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்க... மேலும் பார்க்க