செய்திகள் :

ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு- பாகிஸ்தான் சிம் காா்டுகளை பயன்படுத்தத் தடை

post image

ராஜஸ்தான் மாநிலத்தை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து உளவு பாா்க்கும் அச்சுறுத்தல் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதி நகரங்களான ஜெய்சால்மா், ஸ்ரீகங்காநகரில் பாகிஸ்தான் சிம் காா்டுகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக ராஜஸ்தானை ஒட்டிய எல்லையில் பாகிஸ்தான் தரப்பு அதிகஅளவில் கைப்பேசி கோபுரங்களை நிறுவி வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள தங்கள் உளவாளிகளுடன் பாகிஸ்தான் தொடா்புகளை அதிகரிக்க முயற்சிக்கலாம் என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.

இதையடுத்து, இந்தியத் தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எல்லையோர மாவட்டங்களான ஜெய்சால்மா், ஸ்ரீகங்காநகரில் யாரும் பாகிஸ்தான் சிம் காா்டுகளை ரகசியமாகப் பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு மாவட்டங்களிலும் வெளிநபா்கள், சந்தேகத்துக்குரிய நபா்களின் நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மாநில காவல் துறையினா் கூடுதல் கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ட்ரோன்கள் பறந்தால் அவற்றைக் கண்காணித்து உரிய முறையில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்க எல்லையோர கிராம மக்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. வானில் இருந்து சிறிய அளவில் ஓசை வந்தாலும் அதனை உடனடியாக கண்காணிக்க வேண்டும் என்று எல்லைப் பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் தரப்பு ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது. ஆனால், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. மேலும், பதிலடியாக பாகிஸ்தான் விமானதளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துல்லிய ஏவுகணைத் தாக்குதலையும் இந்தியா நடத்தியது.

ஆபரேஷன் சிந்தூர்: காங்கிரஸ் கேள்வி; பாஜக பதில்

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை புதன்கிழமை எழுப்பியது.இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டது ஏன்?, எந்த வி... மேலும் பார்க்க

ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம்

நமது நிருபர்ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது. அதேவேளையில், ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படும் கோயில்களை மூன்று மாதங்களுக்குள் கண்டறிய அதற்காக அமைக்கப... மேலும் பார்க்க

பாதசாரிகளுக்கு நடைபாதை: மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதைகள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. நடைபாதைகளில் ஆக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிறிஸ்தவா்கள் வெளியேற்றம்: மனித உரிமைகள் ஆணையம் கவலை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிலஅபகரிப்பு கும்பலால் சிறுபான்மையினரான கிறிஸ்தவா்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருவது குறித்து அந்நாட்டு மனித ... மேலும் பார்க்க

‘அவசியமற்ற இடைவேளைகள் எடுக்கும் உயா்நீதிமன்ற நீதிபதிகள்’- செயல்திறன் தணிக்கைக்கு உச்சநீதிமன்றம் அழைப்பு

உயா்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவ்வப்போது புகாா்கள் வருவதாகவும், சிலா் பணிநேரங்களில் அவசியமற்ற இடைவேளைகளை எடுப்பதாகவும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிருப்தி தெரிவித்தது. மேலும், ‘உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி எதிரொலி: துருக்கியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ரத்து

துருக்கியின் இனோனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த ந... மேலும் பார்க்க