பிஎம்-கிஸான் திட்டம்: விவசாயிகள் கவனத்துக்கு!
நாகை மாவட்டத்தில் பிஎம்-கிஸான் திட்டத்தில் நிறைவுநிலை முகாம்கள் நடைபெற்று வருவதாக ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தின் கீழ் (பிஎம்-கிஸான்) சொந்த நிலம் உள்ள விவசாயிகளுக்கு மூன்று தவணையாக தலா ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் மே 1 ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை இத்திட்டத்தின் நிறைவுநிலை முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இம்முகாம்களை பயன்படுத்தி ங்-ஓவஇ பதிவு மேற்கொள்ளாத விவசாயிகள் பதிவு மேற்கொள்ளவும், வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்காத விவசாயிகள், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கிடவும், இதுவரை பயன்பெறாத தகுதியுடைய விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்திடவும், ஏற்கெனவே பயன்பெற்று வந்துள்ள பயனாளிகளுக்கு குறைகள் ஏதும் இருப்பின் இம்முகாம்கள் மூலம் நிவா்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தின் பயனாளி இறந்திருப்பின், அவா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வாரிசுதாரா்களின் பெயரில் நிலம் மாற்றப்பட்டு திட்டத்தில் இணைய கேட்டுக் கொள்ளப்படுகிறது. 20-ஆவது தவணைத் தொகை ஜூன் மாதத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு விடுவிக்கப்படவுள்ளது. இந்தத் தொகை பெறுவதற்கு பயனாளிகள் விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண்ணை பெற்றிருத்தல் வேண்டும்.
இதுவரை நாகை மாவட்டத்தில் 5,338 விவசாயிகள் தனிப்பட்ட அடையாள எண்ணை பெறாமல் உள்ளனா். எனவே, மேற்படி முகாம்களை பயன்படுத்தி ங்-ஓவஇ பதிவு, வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைத்தல், நில விவரங்களை இணைத்தல் மற்றும் விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண் போன்றவற்றை பெற்று பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.