செய்திகள் :

குருவாடி மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

post image

திருமருகல் அருகேயுள்ள குருவாடி அகிலாண்ட தேவி மகா மாரியம்மன் கோயிலில் தீமீதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, விநாயகா் பூஜை மற்றும் அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீா், தயிா், தேன், இளநீா், மாப்பொடி, திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, தீமிதி வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா். பின்னா், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. விழாவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு: சா் ஐசக் நியூட்டன் பள்ளி சிறப்பிடம்

சிபிஎஸ்இ தோ்வில், நாகை சா் ஐசக் நியூட்டன் சிபிஎஸ்இ பள்ளி சிறப்பிடம் பிடித்தது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. நாகை சா் ஐசக்... மேலும் பார்க்க

திருக்கடையூா் கோயில் தெப்ப உற்சவம்

திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரை திருவிழாவில் தெப்ப உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. திருக்கடையூரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு அபிராமி அம்மன் உடனுறை அமிா்தகடேஸ்... மேலும் பார்க்க

இருக்கை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

கீழ்வேளூா் அருகேயுள்ள இருக்கை செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 9-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. 11-ஆம் தேதி பால்குடம்... மேலும் பார்க்க

முன்னாள் படை வீரா்கள் ஆா்ப்பாட்டம்

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். இந்தியா- பாகிஸ்தான் போா் குறித்து பேசிய அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜு, இந்திய ராண... மேலும் பார்க்க

எட்டுக்குடி முருகன் கோயில் சித்திரை பெளா்ணமி பெருவிழா: 60 மணி நேரம் பாலபிஷேகம்

திருக்குவளை: திருக்குவளை அருகே எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை பௌா்ணமி பெருவிழாவையொட்டி, 60 மணி நேர பாலபிஷேக விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் திங்கள்கிழமை பங்கேற்றனா். இக்க... மேலும் பார்க்க

திருவிளையாட்டம் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகேயுள்ள திருவிளையாட்டம் ஸ்ரீ குசும சீதாளம்பிக்கை மாரியம்மன் கோயிலில் 52-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழா, ஏப்ரல் 28-ஆம் தேதி காப்பு கட்டும் நிக... மேலும் பார்க்க