செய்திகள் :

"கில் அல்ல, அந்த வீரர்தான் தகுதியானவர்" - இந்திய டெஸ்ட் கேப்டன் பதவிக்கு யாரைச் சொல்கிறார் அஸ்வின்

post image

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) இங்கிலாந்துக்கெதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.

இவ்வாறிருக்க, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா, மே 7-ம் தேதி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்ததால், யாருடைய கேப்டன்சியில் இங்கிலாந்தை இந்திய அணி எதிர்கொள்ளப்போகிறது என்பது புதிராகவே இருக்கிறது.

பும்ரா, ரோகித்
பும்ரா, ரோகித்

மேலும், விராட் கோலியும் நேற்று முன்தினம் (மே 12) டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டதால், இவ்விருவரின் இடத்தையும் நிரப்பப்போவது யார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பும்ரா தகுதியானவர் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் அணி முற்றிலும் புதிய அணியாக இருக்கும். அந்த அணியில் பும்ரா மூத்த வீரராக இருப்பார். கேப்டன் பதவிக்கான ஆப்ஷன்களில் அவரும் ஒருவரும். என்னைப் பொறுத்தவரை கேப்டன் பதவிக்கு பும்ரா தகுதியானவர். இருப்பினும், தேர்வுக் குழுவினர் அவரின் உடற்தகுதியைக் கொண்டு முடிவெடுப்பார்கள்" என்று கூறினார்.

அஷ்வின்
அஷ்வின்

மேலும், ரோஹித் மற்றும் கோலியின் ஓய்வு குறித்து பேசிய அஸ்வின், "ரோஹித், கோலி இருவரும் ஒன்றாக ஓய்வு பெறுவார்கள் என்று எந்த யோசனையும் இல்லை. இது இந்திய கிரிக்கெட்டுக்கு சோதனைகாலமாக இருக்கும். உண்மையில் இப்போதுதான் கௌதம் கம்பீர் சகாப்தத்தின் தொடக்கம்.

கம்பீர் - ரோஹித் - கோலி
கம்பீர் - ரோஹித் - கோலி

அவர்களின் ஓய்வு நிச்சயமாக ஒரு தலைமைத்துவ வெற்றிடத்தை உருவாக்கும். குறிப்பாக இதுபோன்ற சுற்றுப்பயணங்களில் அனுபவத்தை எங்கிருந்தும் வாங்க முடியாது. விராட்டின் எனர்ஜியும், ரோஹித்தின் அமைதியும் மிஸ்ஸாகும்" என்று தெரிவித்தார்.

Kohli: `ஆகச்சிறந்த டெஸ்ட் கேப்டன்; இன்னும் 2 வருடங்கள் விளையாடியிருக்கலாம்' - கோலி குறித்து அஷ்வின்

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக விராட் கோலி மே 12-ம் தேதி அறிவித்தார். இவரின் ஓய்வு முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.விராட் கோலியின் ஓய்வு குறித்து ரசிகர்கள், கி... மேலும் பார்க்க

Kohli: ஓய்வு அறிவிப்பிற்குப் பிறகு ஆசிரமத்தில் வழிபாடு... வைரலாகும் படங்கள் | Photo Album

Virat Kohli : "1.4 பில்லியன் இதயங்களை உடைத்த கோலி" - உச்சி முகரும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்!சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூ... மேலும் பார்க்க

Virat Kohli : "1.4 பில்லியன் இதயங்களை உடைத்த கோலி" - உச்சி முகரும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்!

இந்திய வீரர் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக நேற்று (மே 12) அறிவித்தார். கோலியின் இந்த திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு வாழ்வின் அட... மேலும் பார்க்க

Rohit - Kohli: 2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாட மாட்டார்களா? - ஓப்பனாகப் பேசிய கவாஸ்கர்!

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கின்றனர்.ஏற்கெனவே, 2024 உலகக் கோப்பையை வென்றபோது... மேலும் பார்க்க

Virat Kohli : `காட்டையே அள்ளி உண்ணும் மிருகம்!' - விராட் கோலி ஏன் 'GOAT' தெரியுமா?

'தீரா பசி கொண்ட மிருகம்!'ஓய்வை அறிவித்திருக்கிறார் விராட் கோலி. எதிர்பார்த்திடாத முடிவு இது. விராட் கோலி எதிலும் திருப்திப்பட்டுக் கொள்பவர் அல்ல. அவருக்கு எல்லாமே இன்னும் இன்னும் தேவைப்பட்டுக் கொண்டே ... மேலும் பார்க்க

Kohli: ``இங்கிலாந்தில் பார்ப்போம் என்று நினைத்தோம், ஆனால்..'' - கோலி ஓய்வு குறித்து பயிற்சியாளர்

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக விராட் கோலி நேற்று (மே 12) அறிவித்தார். இவரின் ஓய்வு முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விராட் கோலியின் ஓய்வு குறித்து ரசிகர்கள், கிரிக... மேலும் பார்க்க