செய்திகள் :

"சிந்தூர்" வெற்றி: பிரதமருக்குப் பாராட்டுத் தெரிவித்த முதல்வர் தாமி!

post image

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை வெற்றிகரமாக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டுத் தெரிவித்தார்.

டேராடூனில் திரங்கா சம்மன் யாத்திரையைக் கொடியசைத்துத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களுடன் முதல்வர் தாமி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்திய ஆயுதப்படைகள் தீர்க்கமான எதிர்த் தாக்குதலை நடத்தி, பாகிஸ்தானிலிருந்த ஒன்பது பயங்கரவாத தளங்களை அழித்து, பாகிஸ்தான் ராணுவத்தை மண்டியிட வைத்தது. இந்திய மக்கள் நமது ராணுவத்துடனும், நாட்டுடனும் ஒற்றுமையாக நின்று ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாடு தழுவிய திரங்கா யாத்திரையை பாஜக செவ்வாயன்று தொடங்கியது. இந்திய வீரர்களின் வீரத்தைக் கௌரவிப்பதையும், ஆப்ரேஷன் சிந்துரின் வெற்றியைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பதையும் இந்த யாத்திரை நோக்கமாகக் கொண்டுள்ளது. திரங்கா யாத்திரை மே 23 வரை தொடர உள்ளது.

அப்பாவி இந்தியக் குடும்பங்களைக் குறிவைப்பதன் விளைவுகளை ஆபரேஷன் சிந்துர் மூலம் பயங்கரவாதிகளுக்கு இந்திய ஆயுதப்படை உணர்த்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை வெற்றிகரமாக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

ஏப்ரல் 22ல் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குத் தீர்க்கமான ராணுவ பதிலடியாக மே 7ல் இந்தியா ஆபரேஷன் சிந்தூரை தொடங்கியது, அதில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாதத் தளங்களை இந்திய ஆயுதப்படைகள் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் கள்ளச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. அமிர்தசரஸின் மஜிதா பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனால் எனும் வேதியல் பொருளைப் பய... மேலும் பார்க்க

இந்திய பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக உயர்வு!

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ், இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, இந்த 2024 - 25ஆம் நிதியாண்டில் ரூ.23,622 கோடியாக அதிகரித்துள்ளது.இதுவே கடந்த ஆண்டு ரூ.21,083 கோடியாக இருந்ததும், தற்ப... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதலுக்குள்ளான மக்களுடன் உமர் அப்துல்லா கலந்துரையாடல்!

பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பார்வையிட்டு, அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ... மேலும் பார்க்க

குடியரசுத்தலைவருடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படைத் தலைமைத் தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகள் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான், ராணுவப் படைத் தலைவர் உபேந்திர திவேதி, வ... மேலும் பார்க்க

பஞ்சாப் எல்லையில் 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறப்பு!

போர்ப் பதற்றம் காரணமாக எல்லையை ஒட்டியுள்ள பஞ்சாப் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், ஆறு நாள்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தன... மேலும் பார்க்க

எல்லை தாண்டி கைதான இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் வசம் இருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் இன்று இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். கடந்த ஏப். 22 ஆம் தேதி பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றச் சூழல் நிலவி... மேலும் பார்க்க