செய்திகள் :

குடியரசுத்தலைவருடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு!

post image

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படைத் தலைமைத் தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகள் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர்.

முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான், ராணுவப் படைத் தலைவர் உபேந்திர திவேதி, விமானப் படைத் தலைவர் ஏ.பி. சிங், கடற்படைத் தலைவர் தினேஷ் கே. திரிபாதி ஆகியோர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆபரேஷன் சிந்தூர் பற்றியும் இந்தியா - பாகிஸ்தான் தற்போதைய நிலை பற்றியும் விளக்கமளித்து வருகின்றனர்.

அப்போது பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்த இந்திய பாதுகாப்புப் படைகளின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் குடியரசுத்தலைவர் பாராட்டியதாக குடியரசுத்தலைவர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தம்

கடந்த ஏப். 22 பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை கடந்த மே 7 அன்று இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் ராணுவ நிலைகள், விமான தளங்களை இந்தியா தாக்கி அழித்தது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது.

இதனிடையே, இரு நாடுகளிடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் முன்வந்தது. அதன்படி போர் நிறுத்தப்படுவதாக சனிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் மோடியும் மக்களிடம் உரையாற்றினார்.

எல்லையில் அமைதியான சூழ்நிலை திரும்பி வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் எல்லையில் கண்காணிப்புப் பணி தொடர்ந்து வருகிறது.

இதையும் படிக்க | மே 16-ல் 10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

"சிந்தூர்" வெற்றி: பிரதமருக்குப் பாராட்டுத் தெரிவித்த முதல்வர் தாமி!

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை வெற்றிகரமாக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டுத் தெரிவித்தார்.டேராடூனில் திரங்கா சம்மன் யாத்திரையைக் கொடியசைத்துத் தொடங்கி... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதலுக்குள்ளான மக்களுடன் உமர் அப்துல்லா கலந்துரையாடல்!

பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பார்வையிட்டு, அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ... மேலும் பார்க்க

பஞ்சாப் எல்லையில் 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறப்பு!

போர்ப் பதற்றம் காரணமாக எல்லையை ஒட்டியுள்ள பஞ்சாப் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், ஆறு நாள்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தன... மேலும் பார்க்க

எல்லை தாண்டி கைதான இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் வசம் இருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் இன்று இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். கடந்த ஏப். 22 ஆம் தேதி பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றச் சூழல் நிலவி... மேலும் பார்க்க

இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி

பஹல்கலாம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் ஹேக்கா்கள் மேற்கொண்டதை மகாராஷ்டி... மேலும் பார்க்க

வா்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா? டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை ந... மேலும் பார்க்க