செய்திகள் :

பஞ்சாப் எல்லையில் 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறப்பு!

post image

போர்ப் பதற்றம் காரணமாக எல்லையை ஒட்டியுள்ள பஞ்சாப் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், ஆறு நாள்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்ப் பதற்றம் நிலவி வந்த நிலையில், பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள ஐந்து பஞ்சாப் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மே 8 அன்று மாநில அரசுக் கல்வி நிறுவனங்களை மூன்று நாள்களுக்கு மூட உத்தரவிட்டது.

பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் திங்களன்று மீண்டும் திறக்கப்பட்டாலும் எல்லையிலுள்ள ஆறு மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. பஞ்சாப் பாகிஸ்தானுடன் 553 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அமிர்தசரஸ், டர்ன் தரன், பதான்கோட், ஃபாசில்கா, ஃபெரோஸ்பூர், குருதாஸ்பூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.

குருதாஸ்பூரில் உள்ள பள்ளிகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மற்ற ஐந்து எல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் புதன்கிழமையான இன்று திறக்கப்பட்டன.

அரசு வழிகாட்டுதல்களின்படி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதாக அமிர்தசரஸில் உள்ள அட்டாரியில் உள்ள ஸ்ரீ குரு ஹர்க்ரிஷன் பொதுப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

பதான்கோட்டில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளில் மாணவர் வருகை 80 சதவீதமாக இருந்ததாகவும், அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று ஆசிரியர் கூறினார்.

பஞ்சாபில் எல்லைப் பகுதிகளில் நிலைமை இயல்பானதைத் தொடர்ந்து சந்தைகளில் வழக்கம்போல் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டன.

நான்கு நாள்கள் எல்லை தாண்டிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் மே 10 அன்று ஒரு உடன்பாட்டை எட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

"சிந்தூர்" வெற்றி: பிரதமருக்குப் பாராட்டுத் தெரிவித்த முதல்வர் தாமி!

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை வெற்றிகரமாக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டுத் தெரிவித்தார்.டேராடூனில் திரங்கா சம்மன் யாத்திரையைக் கொடியசைத்துத் தொடங்கி... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதலுக்குள்ளான மக்களுடன் உமர் அப்துல்லா கலந்துரையாடல்!

பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பார்வையிட்டு, அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ... மேலும் பார்க்க

குடியரசுத்தலைவருடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படைத் தலைமைத் தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகள் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான், ராணுவப் படைத் தலைவர் உபேந்திர திவேதி, வ... மேலும் பார்க்க

எல்லை தாண்டி கைதான இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் வசம் இருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் இன்று இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். கடந்த ஏப். 22 ஆம் தேதி பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றச் சூழல் நிலவி... மேலும் பார்க்க

இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி

பஹல்கலாம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் ஹேக்கா்கள் மேற்கொண்டதை மகாராஷ்டி... மேலும் பார்க்க

வா்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா? டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை ந... மேலும் பார்க்க