செய்திகள் :

ஷெல் தாக்குதலுக்குள்ளான மக்களுடன் உமர் அப்துல்லா கலந்துரையாடல்!

post image

பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பார்வையிட்டு, அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி அழித்தது. இதற்குப் பாகிஸ்தான் சார்பிலும் பதில் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து நான்கு நாள்கள் இந்த போர்ப் பதற்றம் நீடித்தது. இதையடுத்து இருநாடு உடன்படிக்கையை அடுத்துப் போர் கைவிடப்பட்டது.

இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரியின் சலாமாபாத் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் உமர் அப்துல்லா பார்வையிட்டார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸில் பகிர்ந்த செய்தியில்,

சமீபத்தில் தாக்குதலின்போது காஷ்மீரின் எல்லைக் கிராமங்களில் வசிக்கும் இடங்களையும், மக்களையும் இன்று நேரில் பார்வையிட்டேன்.

எல்லையோர மக்கள் அனுபவித்த இழப்பும், வலியும் கற்பனை செய்ய முடியாதது. மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுடன் கலந்துரையாடினேன்.

ஜம்மு-காஷ்மீரின் எல்லை மாவட்டங்களில் பாகிஸ்தானின் கடுமையான ஷெல் தாக்குதலால் அவர்களின் குடியிருப்பு கட்டமைப்புகள் சேதமடைந்தன. மேலும் எல்லை கிராமங்களில் வசிக்கும் மக்கள் சேதமடைந்த வீடுகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் அதற்குன்டான பணிகளில் ஈடுபடுவோம் என்று முதல்வர் கூறினார்.

6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது மைக்ரோசாஃப்ட்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில், 6 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது உலகளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையில் 3% ஆகும... மேலும் பார்க்க

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கான பாதுகாப்பு அதிகரிப்பு!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பானது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களினால் ... மேலும் பார்க்க

2 வது முறையாக அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்க கத்தார் பறந்தார் முகேஷ் அம்பானி!

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து 2வது முறையாக அவரைச் சந்திக்க முகேஷ் அம்பானி கத்தார் நாட்டுக்குச் சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசு முறைப் பயணமாக கத்தார் ந... மேலும் பார்க்க

பஞ்சாப் கள்ளச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. அமிர்தசரஸின் மஜிதா பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனால் எனும் வேதியல் பொருளைப் பய... மேலும் பார்க்க

இந்திய பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக உயர்வு!

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ், இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, இந்த 2024 - 25ஆம் நிதியாண்டில் ரூ.23,622 கோடியாக அதிகரித்துள்ளது.இதுவே கடந்த ஆண்டு ரூ.21,083 கோடியாக இருந்ததும், தற்ப... மேலும் பார்க்க

"சிந்தூர்" வெற்றி: பிரதமருக்குப் பாராட்டுத் தெரிவித்த முதல்வர் தாமி!

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை வெற்றிகரமாக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டுத் தெரிவித்தார்.டேராடூனில் திரங்கா சம்மன் யாத்திரையைக் கொடியசைத்துத் தொடங்கி... மேலும் பார்க்க