செய்திகள் :

6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது மைக்ரோசாஃப்ட்!

post image

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில், 6 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது உலகளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையில் 3% ஆகும்.

இதன்மூலம், 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு மைக்ரோசாஃப்ட்டில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

செய்யறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூடிங் துறைகளில் கணிசமான வளர்ச்சியை எட்டிய பிறகும் மைக்ரோசாஃப்டில் அதிக எண்ணிக்கையில் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

இது குறித்து மைக்ரோசாஃப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்முகத்தன்மை வாய்ந்த சந்தையில் வெற்றிப்பட்டியலில் மிகச்சிறந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டியதால், நிறுவனத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது கட்டாயமாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணிநீக்கமானது, ஊழியர்களின் வேலையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதல்ல. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பணியில் சிறந்த பங்களிப்பை அளிக்காதவர்களை மைக்ரோசாஃப் பணிநீக்கம் செய்திருந்தது.

இம்முறை செய்யப்பட்டுள்ள பணிநீக்கமானது முற்றிலும் செய்யறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங்கிற்கு முன்னுரிமை அளித்து, அதில் கவனம் செலுத்தும் வகையில் நிறுவனத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்துவருவதன் ஒரு பகுதியாக இப்பணிநீக்கம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க | வெளியுறவுத் துறை அமைச்சருக்கான பாதுகாப்பு அதிகரிப்பு!

மீண்டும் படப்பிடிப்பில் ஆந்திர துணை முதல்வர்!

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யான் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட பிரபல நடிக... மேலும் பார்க்க

துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவு 60% சரிவு!

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவை இந்தியர்கள் ரத்து செய்துவருகின்றனர். சுற்றுலாத் தலங்களுக்காக பயணத்தை முன்பதிவு செய்யும் இணையதள செயல... மேலும் பார்க்க

அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி... பிளஸ் 2 தேர்வில் 95.6% எடுத்து சாதனை!

சண்டிகரில் அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் 95.6% மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இளம் வயதிலேயே குடும்ப பிரச்னை காரணமாக அண்டை வீட்டைச் சேர்ந்தவர், மாணவி மீது அமிலத்தை வீ... மேலும் பார்க்க

காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஷோப்பியன் மாவட்டத்தில் லஷ்கர் பயங்கரவாதிகள் மூன்று பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தெற்... மேலும் பார்க்க

கர்னல் சோஃபியா குறித்து சர்ச்சை: பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிய உத்தரவு!

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சையாகப் பேசிய பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்ய மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சோஃபியா குரேஷியை, பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின... மேலும் பார்க்க

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கான பாதுகாப்பு அதிகரிப்பு!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பானது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களினால் ... மேலும் பார்க்க