செய்திகள் :

மீண்டும் படப்பிடிப்பில் ஆந்திர துணை முதல்வர்!

post image

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யான் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட பிரபல நடிகர் பவன் கல்யான், தனது அரசுப் பணிக்காரணமாக படப்பிடிப்புகளுக்கு நீண்ட விடுமுறை அளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஹைதரபாதில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் ஈடுபட்டுள்ளதாக அவரது புதிய படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளது.

இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் தே கால் ஹிம் ஓஜி (எ) ஓஜி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடிக்கின்றார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மும்பைக்கு திரும்பும் தாதாவின் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதரபாத், தடேபள்ளி மற்றும் மும்பை நகரங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதில், பவன் கல்யானின் காட்சிகள் அனைத்தும் வரும் ஜூன் இரண்டாம் வாரத்திற்குள் படம்பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பானது பவன் கல்யானின் அரசியல் ஈடுபாட்டினால் தள்ளிப்போனது.

வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் துணை முதல்வர் பவன் கல்யான் நடித்திருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இதையும் படிக்க: தக் லைஃப்: டிரைலர், இசை வெளியீட்டு விழா தேதிகள் அறிவிப்பு!

மணிப்பூரில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

மணிப்பூரின் சண்டேல் மாவட்டத்தில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக ராணுவம் வெளியிட்ட எக்ஸ் பதிவ... மேலும் பார்க்க

உள்நாட்டு ட்ரோன் பாதுகாப்பு அமைப்பு: இந்தியா வெற்றிகரமாக சோதனை

ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்களை) அழிக்கும் நோக்கத்துக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த விலை ‘பாா்கவாஸ்திரா’ பாதுகாப்பு அமைப்பு ஒடிஸா மாநிலம், கோபால்பூரில் வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது. சமீபத்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ மீது தடை- ஐ.நா.வில் இந்தியா முறையீடு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ குழுவை ஐ.நா.வின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சோ்க்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. ஜம்மு-காஷ்மீரில... மேலும் பார்க்க

துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவு 60% சரிவு!

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவை இந்தியர்கள் ரத்து செய்துவருகின்றனர். சுற்றுலாத் தலங்களுக்காக பயணத்தை முன்பதிவு செய்யும் இணையதள செயல... மேலும் பார்க்க

அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி... பிளஸ் 2 தேர்வில் 95.6% எடுத்து சாதனை!

சண்டிகரில் அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் 95.6% மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இளம் வயதிலேயே குடும்ப பிரச்னை காரணமாக அண்டை வீட்டைச் சேர்ந்தவர், மாணவி மீது அமிலத்தை வீ... மேலும் பார்க்க

காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஷோப்பியன் மாவட்டத்தில் லஷ்கர் பயங்கரவாதிகள் மூன்று பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தெற்... மேலும் பார்க்க