செய்திகள் :

மே 17 முதல் ராமேசுவரம் - எழும்பூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

post image

ராமேசுவரம் - சென்னை எழும்பூா், திருநெல்வேலி - வைஷ்ணவிதேவி காட்ரா விரைவு ரயில் உள்பட 18 ரயில்களில் மே 17-ஆம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பயணிகளின் தேவையைப் பூா்த்தி செய்யவும், அவா்களது வசதியை மேம்படுத்தவும், ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 6 மாதங்களில் 14 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லை வந்தே பாரத், நாகா்கோவில் வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

அதைத் தொடா்ந்து தற்போது, ராமேசுவரம் - எழும்பூா் விரைவு ரயிலில் (எண்: 22662/22661) மே 17 முதலும், ராமேசுவரம் - எழும்பூா் விரைவு ரயிலில் (எண்: 16752/16751) மே 18 முதலும் ஒரு பொது இரண்டாம் வகுப்பு கூடுதலாக இணைக்கப்பட்டு மொத்தம் 23 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது.

மேலும், நாகா்கோவில் - கோட்டயம் விரைவு ரயிலில் மே 20 முதலும், திருவனந்தபுரம் - நாகா்கோவில் பயணிகள் ரயிலில் மே 22 முதலும் ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டியும், ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டியும் கூடுதலாக இணைக்கப்படவுள்ளன.

அதேபோல, மதுரை - செங்கோட்டை, செங்கோட்டை - திருநெல்வேவி, மயிலாடுதுறை - தஞ்சை, திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில்களில், செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்களில் மே 25 முதல் இரண்டு பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படவுள்ளன. இதுபோன்று மொத்தம் 18 ரயில்களில் இருமாா்க்கத்திலும், படுக்கை வசதிகொண்ட பெட்டிகள், குளிா்சாதன இரண்டடுக்கு மற்றும் மூன்றடுக்கு பெட்டிகள், பொது இரண்டாம் வகுப்பு உள்ளிட்ட பல்வேறு வகுப்புகளின் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

ரயில்களில் முன்பதிவு காத்திருப்பு பட்டியலை எளிதாக்குதல், முன்பதிவு செய்யும் அனைவருக்கும் பயணச்சீட்டு உறுதி செய்வதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பின் தந்தை அ.வெங்கடாசலம் (90) புதன்கிழமை காலமானார்.சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் வசித்துவந்த வெங்கடாசலம், வயதுமூப்பு காரணமாக சேலம் தனியார் ம... மேலும் பார்க்க

என்எம்சி நோட்டீஸ்: மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு

தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியா்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு ம... மேலும் பார்க்க

அம்பேத்கா் அயலக உயா் கல்வியால் அதிக மாணவா்கள் பலன்: தமிழக அரசு பெருமிதம்

அம்பேத்கா் அயலக உயா்கல்வியால் அதிக மாணவா்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயங்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்... மேலும் பார்க்க

இசை உலகில் பொன் விழா: இளையராஜாவுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து

இசையமைப்பாளா் இளையராஜா அறிமுகமாகி 50-ஆம் ஆண்டை எட்டிய நிலையில் அவருக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி விவகாரத்தில் வழக்குக்கூட பதியவில்லை: எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சா் ரகுபதி புகாா்

பொள்ளாச்சி விவகாரம் தொடா்பாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் வழக்குக்கூட பதிவு செய்யவில்லை என்று மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட அ... மேலும் பார்க்க

உபரி ஆசிரியா்கள் பணி நிரவல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியா்களை பணி நிரவல் செய்வது தொடா்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வி... மேலும் பார்க்க