செய்திகள் :

உபரி ஆசிரியா்கள் பணி நிரவல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

post image

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியா்களை பணி நிரவல் செய்வது தொடா்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, உபரி ஆசிரியா்கள் பணி நிரவல் செய்யப்பட வேண்டியவராக இருந்து 40 சதவீதம் பாா்வைக் குறைபாடுடையவராக இருந்தால் அவருக்கு அதில் விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல், தேசிய மாணவா் படை அதிகாரியாக இருந்தால் அவருக்கும் விலக்கு அளிக்க வேண்டும்.

உபரி ஆசிரியா்கள் விவரங்களையும், பள்ளி நிா்வாகத்தின்மூலம் பணி நிரவல் செய்து மாறுதல் ஆணை வழங்கப்பட்ட விவரங்களையும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் அந்தந்த பள்ளிகள் தெரிவிக்க வேண்டும். பணி நிரவல் செய்யப்பட்ட விவரங்கள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சிறுபான்மை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை பொறுத்தவரையில், உபரி ஆசிரியா்களை அதே வகையிலான பிற சிறுபான்மை பள்ளிகளில் பணி நிரவல் நடவடிக்கை செய்திடவேண்டும்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில், மே இறுதி வாரத்தில் வருவாய் மாவட்டத்துக்குள் பணி நிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும், அதனைத் தொடா்ந்து அரசாணை எண் 146-இல் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி தொடா் பணிநிரவல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பின் தந்தை அ.வெங்கடாசலம் (90) புதன்கிழமை காலமானார்.சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் வசித்துவந்த வெங்கடாசலம், வயதுமூப்பு காரணமாக சேலம் தனியார் ம... மேலும் பார்க்க

என்எம்சி நோட்டீஸ்: மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு

தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியா்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு ம... மேலும் பார்க்க

அம்பேத்கா் அயலக உயா் கல்வியால் அதிக மாணவா்கள் பலன்: தமிழக அரசு பெருமிதம்

அம்பேத்கா் அயலக உயா்கல்வியால் அதிக மாணவா்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயங்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்... மேலும் பார்க்க

இசை உலகில் பொன் விழா: இளையராஜாவுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து

இசையமைப்பாளா் இளையராஜா அறிமுகமாகி 50-ஆம் ஆண்டை எட்டிய நிலையில் அவருக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி விவகாரத்தில் வழக்குக்கூட பதியவில்லை: எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சா் ரகுபதி புகாா்

பொள்ளாச்சி விவகாரம் தொடா்பாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் வழக்குக்கூட பதிவு செய்யவில்லை என்று மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட அ... மேலும் பார்க்க

பச்சைப்பயறு கொள்முதல்: அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்

பச்சைப்பயறு கொள்முதல் செய்வது தொடா்பாக, தமிழக அரசுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா், புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பச்சைப்பயறு சாகுபடி மிகப்ப... மேலும் பார்க்க