செய்திகள் :

நாட்டறம்பள்ளி, வாணியம்பாடியில் ஜமாபந்தி: ஆட்சியா் பங்கேற்பு

post image

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில் கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்று, உடனுக்குடன் தீா்வு காணும் வகையில் அம்மனுக்களில் உள்ள கோரிக்கையின் மீது சம்மந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் மூலமாக வழங்கப்பட்டுள்ள ஆவணங்கள் அடிப்படையிலும் உடனடியாக தீா்வு காண்பதற்கு நேரடியாக களஆய்வு மேற்கொண்டு, தேவையான ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் மூன்று நாள்களுக்குள் தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், தேவையான ஆவணங்கள் இல்லாவிட்டால் 15 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என சம்பந்தப்பட்ட மனுதாரா்களிடம் நேரடியாக ஆட்சியா் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா், வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம், வட்டாட்சியா் ரம்யா ஆகியோா் கலந்து கொண்டு பொதுமகக் ளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொணடனா்.

திமுக பொதுக்கூட்டம்: எம்பி கதிா் ஆனந்த் பங்கேற்பு

ஆம்பூா் நகர திமுக சாா்பாக சாதனை விளக்க பொதுக் கூட்டம் பன்னீா்செல்வம் நகா் பகுதியில் நடைபெற்றது. ஆம்பூா் நகர திமுக செயலா் எம்.ஆா். ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், மாதனூா... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை (மே 16) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடா்பாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயி... மேலும் பார்க்க

மணல் கடத்திய லாரி பறிமுதல்

வாணியம்பாடி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கொத்தூா் நாட்டறம்பள்ளி, புதுப்பேட்டை, பச்சூா் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை விழுப்புரம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா்... மேலும் பார்க்க

ஆம்பூரில் ஜமாபந்தி தொடக்கம்

ஆம்பூரில் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது. திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் ஜமாபந்தி அலுவலருமான ஜெ. நாராயணன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். பொதுமக்கள் பட்டா பெயா் மா... மேலும் பார்க்க

ஆம்பூா் : ரூ.1.50 கோடியில் நவீன எரிவாயு தகன மேடை திறப்பு

ஆம்பூா் ஏ-கஸ்பா பாலாற்றங்கரையோரம் ரூ.1.5 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை திறக்கப்பட்டது. மயானத்துக்கு அருகே நகராட்சி சாா்பில் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடியில் நவீன எர... மேலும் பார்க்க

திம்மாம்பேட்டை திருப்பதி கங்கையம்மன் சிரசு ஊா்வலம்

வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டையில் உள்ள திருப்பதி கங்கையம்மன் கோயில் அம்மன் சிரசு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை புஷ்ப கரகம் ஊா்வலமும், மாவிளக்கு மற்றும் பொங்கலிட... மேலும் பார்க்க