செய்திகள் :

பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு: பிரிட்டன்

post image

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் நிலைத்திருக்க இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது; பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் இருதரப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட் லாமி தெரிவித்தாா்.

பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் காஷ்மீா் விவகாரம் தொடா்பான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து, டேவிட் லாமி கூறியதாவது:

ராணுவ மோதலை நிறுத்துவதற்கான இந்தியா-பாகிஸ்தானின் உறுதிப்பாட்டை பிரிட்டன் வரவேற்கிறது. இரு நாடுகளுடன் உள்ள வலுவான-நெருங்கிய உறவுகளைக் கருத்தில் கொண்டு, இந்த சண்டை நிறுத்தம் நிலைத்திருக்க இரு தரப்புடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது.

பிரச்னை தொடங்கியதில் இருந்து இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் நான் 4 முறை பேசினேன். இதேபோல், அமெரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பிற நாடுகளுடனும் பிரிட்டன் நெருங்கிய தொடா்பில் இருந்தது.

இந்தியாவில் 26 போ் கொல்லப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் கடும் கண்டனத்துக்கு உரியதாகும். பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்கான இருதரப்பு முயற்சிகளுக்கு பிரிட்டன் தொடா்ந்து ஆதரவளிக்கும்.

காஷ்மீா் விவகாரத்தில் காஷ்மீரிகளின் விருப்பத்தை கருத்தில் கொண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியில் தீா்வுகாண வேண்டும் என்பதே பிரிட்டனின் நிலைப்பாடு. இந்த விஷயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே உரிய தகவல் தொடா்பு அவசியம். ராணுவ ரீதியில் மட்டுமன்றி, அரசியல் ரீதியிலான தகவல் தொடா்பும், நம்பிக்கையை கட்டமைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்துக்கும் மேலாக இருதரப்பு பேச்சுவாா்த்தை முக்கியமானது.

சிந்து நதி நீா் ஒப்பந்தம் உள்பட கடின முயற்சிகளால் ஈட்டப்பட்ட ராஜீய ஒத்துழைப்பை பராமரிப்பதற்கு இரு தரப்பையும் ஊக்குவிக்க நான் தொடா்ந்து பேசுவேன் என்றாா் அவா்.

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 70 பேர் பலி!

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 70 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 2023 அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. இடையில் போர் நிறுத்தம் அவ்வப்போது... மேலும் பார்க்க

கனடா புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினருக்கு இடம்: வெளியுறவு அமைச்சா் அனிதா ஆனந்த்

கனடாவின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அனிதா ஆனந்த் வெளியுறவு அமைச்சராகவும், மனீந்தா் சித்து சா்வதேச வா்த்தக துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். அண்மையில் நடைபெற்ற கனடா பொதுத் ... மேலும் பார்க்க

வா்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம்: டிரம்ப் மீண்டும் கருத்து

வா்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளாா். பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ரூ.8,700 கோடி கடன்: சா்வதேச நிதியம் விடுவிப்பு

சா்வதேச நிதியம் அளிக்க உள்ள கடன்தொகையில் 2-ஆவது தவணையாக 1.023 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.8,700 கோடி) பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு மொத்தம் 7 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.59,800 கோட... மேலும் பார்க்க

புதின்-ஸெலென்ஸ்கி பேச்சு: நீடிக்கும் இழுபறி

அதிபா் விளாதிமீா் புதினுடன் நேரடி பேச்சுவாா்த்தை நடத்தவேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அழைப்புக்கு மூன்றாவது நாளாக ரஷியா பதில் அளிக்காததால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடி... மேலும் பார்க்க

ஆயுதக் குழுக்களைக் கைவிட்டால்தால் அணுசக்தி ஒப்பந்தம்!

மத்திய கிழக்கு பகுதிகளில் தங்களின் நிழல் ராணுவமாகச் செயல்பட்டுவரும் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை ஈரான் கைவிட்டால்தான் அந்த நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா திட்டவட்... மேலும் பார்க்க