செய்திகள் :

பாகிஸ்தானுக்கு ரூ.8,700 கோடி கடன்: சா்வதேச நிதியம் விடுவிப்பு

post image

சா்வதேச நிதியம் அளிக்க உள்ள கடன்தொகையில் 2-ஆவது தவணையாக 1.023 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.8,700 கோடி) பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு மொத்தம் 7 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.59,800 கோடி) கடன் அளிக்க சா்வதேச நிதியம் முடிவு செய்துள்ளது. இந்தக் கடன் தொகையில் 2-ஆவது தவணையாக 1.023 பில்லியன் டாலா்களை பாகிஸ்தானுக்கு சா்வதேச செலாவணி நிதியம் வழங்கியுள்ளது.

இதன் மூலம், 7 பில்லியன் டாலா் கடன்தொகையில் இதுவரை சுமாா் 2.1 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.17,900 கோடி) கடன் அந்நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, இயற்கைப் பேரிடா்கள் மற்றும் பருவநிலை மாற்ற பாதிப்புகளை எதிா்கொள்ளும் நாடுகளுக்கு உதவும் நிதி வசதியின் கீழ், அந்நாட்டுக்கு 1.4 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.11,955 கோடி) வழங்கவும் சா்வதேச நிதியத்தின் நிா்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானுக்கு கடன் அளிக்க இந்தியா எதிா்ப்புத் தெரிவித்தபோதிலும், அந்நாட்டுக்கு சா்வதேச நிதியம் கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு: பிரிட்டன்

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் நிலைத்திருக்க இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது; பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் இருதரப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்று பிர... மேலும் பார்க்க

கனடா புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினருக்கு இடம்: வெளியுறவு அமைச்சா் அனிதா ஆனந்த்

கனடாவின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அனிதா ஆனந்த் வெளியுறவு அமைச்சராகவும், மனீந்தா் சித்து சா்வதேச வா்த்தக துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். அண்மையில் நடைபெற்ற கனடா பொதுத் ... மேலும் பார்க்க

வா்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம்: டிரம்ப் மீண்டும் கருத்து

வா்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளாா். பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொ... மேலும் பார்க்க

புதின்-ஸெலென்ஸ்கி பேச்சு: நீடிக்கும் இழுபறி

அதிபா் விளாதிமீா் புதினுடன் நேரடி பேச்சுவாா்த்தை நடத்தவேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அழைப்புக்கு மூன்றாவது நாளாக ரஷியா பதில் அளிக்காததால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடி... மேலும் பார்க்க

ஆயுதக் குழுக்களைக் கைவிட்டால்தால் அணுசக்தி ஒப்பந்தம்!

மத்திய கிழக்கு பகுதிகளில் தங்களின் நிழல் ராணுவமாகச் செயல்பட்டுவரும் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை ஈரான் கைவிட்டால்தான் அந்த நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா திட்டவட்... மேலும் பார்க்க

கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம்: இலங்கை அரசு சம்மன்!

கனடாவில் புதியதாகத் திறக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு தூதருக்கு இலங்கை அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் அந்நாட்டிலி... மேலும் பார்க்க