செய்திகள் :

கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம்: இலங்கை அரசு சம்மன்!

post image

கனடாவில் புதியதாகத் திறக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு தூதருக்கு இலங்கை அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் அந்நாட்டிலிருந்து வெளியேறிய லட்சக்கணக்கான தமிழர்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். அதில், பெரும்பாலான மக்கள் கனடாவில் வசித்து வருகின்றனர்.

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின் பிராம்டன் நகரத்தில் அந்நாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் அரசின் உதவியுடன் தமிழின அழிப்பு நினைவகம் திறக்கப்பட்டது. இது, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற படுகொலைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனடாவில் திறக்கப்பட்ட இந்தப் புதிய நினைவகத்துக்கு எதிராக தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துக்கொள்ளுமாறு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜிதா ஹெராத் அந்நாட்டின் கனடா தூதர் எரிக் வால்ஷ்-க்கு சம்மன் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது, இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் எந்தவொரு நம்பகமான ஆதாரமற்றவை எனவும், திசைத் திருப்பும் முயற்சியெனவும் இலங்கை அரசு கூறியுள்ளது.

மேலும், இந்தத் தவறான குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு முழுவதுமாக மறுத்ததுடன், நினைவகம் கட்டப்பட்ட விவகாரம் முழுவதும் கனடா தேர்தல் ஆதாயத்திற்கான பிரச்சாரம் எனத் தாங்கள் நம்புவதாகத் தெரிவித்துள்ளது.

இத்துடன், கடந்த 2021-ம் ஆண்டு கனடா வெளியுறவு, வர்த்தகம் மற்றும் வளர்ச்சித் துறை இலங்கையில் இனப்படுகொலை நடந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் கண்டுபிடிக்கவில்லை என உறுதி செய்ததை அந்த அறிக்கையில் இலங்கை அரசு மேற்கொள் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வெளிநாடுகளில் யாசகம் எடுத்து வந்த 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தல்!

வெளிநாடுகளில் பிச்சையெடுத்த 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் நாடுகடத்தல்!

2024-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் பிச்சையெடுப்பில் ஈடுபட்ட சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று அங்கு ... மேலும் பார்க்க

பலோசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை: சுதந்திரம் பெற்றுவிட்டதாக அறிவிப்பு

பாகிஸ்தானிடமிருந்து பலோசிஸ்தான் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், பலோசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை எனவும் பலோச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலோச் அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் தன்னுடைய எக... மேலும் பார்க்க

போர்களின் முடிவுக்கு உலகத் தலைவர்களுக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார்! புதிய போப்!

உலகில் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளில் போர்நிறுத்தம் கொண்டு வர அந்நாட்டு தலைவர்களுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என புதிய போப் பதினான்காம் லியோ தெரிவித்துள்ளார்.முன்னாள் போப் பிரான்சிஸ் கடந்த ஏப்... மேலும் பார்க்க

அதிகாலையில் காஸாவின் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்! 22 குழந்தைகள் உள்பட 60 பேர் பலி!

காஸா மீதான இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்களில் 22 குழந்தைகள் உள்பட 60 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவின் பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று (மே 14) அதிகாலை நடத்திய ... மேலும் பார்க்க

கத்தார் பரிசளிக்கும் வானத்தின் அரண்மனை: பெற்றுக்கொள்வாரா டிரம்ப்! பின்னணி

கத்தார் அளிக்கும் பல கோடி மதிப்பிலான போயிங் விமானத்தை, தான் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பது முட்டாள்தனம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிந்துகொண்டுள்ளார்.அமெரிக்க அரசோ அல்லது அதிபருக்கோ, வெளிந... மேலும் பார்க்க

அமெரிக்க உலோகங்களுக்கு பதிலடி வரி விதிக்க இந்தியா முடிவு

இந்தியாவின் எஃகு, அலுமினியம் மற்றும் தொடா்புடைய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிக்கு பதிலடியாக, அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் சில உலோகப் பொருள்களுக்கு வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்... மேலும் பார்க்க