செய்திகள் :

கத்தார் பரிசளிக்கும் வானத்தின் அரண்மனை: பெற்றுக்கொள்வாரா டிரம்ப்! பின்னணி

post image

கத்தார் அளிக்கும் பல கோடி மதிப்பிலான போயிங் விமானத்தை, தான் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பது முட்டாள்தனம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிந்துகொண்டுள்ளார்.

அமெரிக்க அரசோ அல்லது அதிபருக்கோ, வெளிநாடுகளிலிருந்து இதுவரைக் கிடைத்த பரிசுப் பொருள்களிலேயே மிகவும் விலை மதிப்புள்ள பரிசாக இந்த போயிங் விமானம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொகுசு போயிங் விமானத்தை அமெரிக்க அதிபருக்கு பரிசளிக்க கத்தார் முன் வந்துள்ளது.

இந்த பரிசுப் பொருள்களை ஏற்றுக்கொள்வதால், அமெரிக்க அதிபர் எடுக்கும் முடிவுகளில் இந்த நாட்டுக்கு சாதகமான நிலைப்பாடு இருக்க நெருக்கடி ஏற்படும் என எதிர்க்கட்சிகளும், அந்நாட்டு மூத்த வழக்குரைஞர்களும் கருத்துக் கூறி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல், ஒரு அமெரிக்க அதிபராக இருப்பவர், தனது நாட்டின் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடுகளிலிருந்து பரிசுகளை பெற முடியாது. எனவே, இந்த போயிங் விமானத்தை அமெரிக்க பாதுகாப்புத்துறையின் மூலம் பெற்றுக்கொள்ள அதிபர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், விலை உயர்ந்த போயிங் விமானத்தை பரிசாகப் பெறக் கூடாது என்று செய்தியாளர்களின் கூட்டத்தில் கேள்வி கேட்ட செய்தியாளரை திட்டித்தீர்த்துள்ளார் அதிபர் டொனால்ட் டரம்ப்.

இந்த போயிங் விமானம், தனது அதிபர் அலுவலகப் பயன்பாட்டுக்கு இருக்கும் என்றும், தனிப்பட்ட பயன்பாடுகளுக்கும், அலுவலகப் பயன்பாட்டைத் தவிர்த்து வேறு எதற்கும் பயன்படுத்த விருப்பமில்லை என்றும் கூறியிருக்கிறார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்பட்ட டொனால்ட் டிரம்ப், கத்தாரிடமிருந்து வரும் மிக அற்புதமான பரிசாக இது இருக்கும். இதனை நான் வரவேற்கிறேன். இதுபோன்ற ஒரு பரிசை நான் ஒருபோதும் மறுக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதாவது, மிகவும் விலையுயர்ந்த விமானத்தை, நான் இலவசமாக பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்வதற்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லை என்றுதான் கூறுகிறேன் என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அமெரிக்க உலோகங்களுக்கு பதிலடி வரி விதிக்க இந்தியா முடிவு

இந்தியாவின் எஃகு, அலுமினியம் மற்றும் தொடா்புடைய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிக்கு பதிலடியாக, அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் சில உலோகப் பொருள்களுக்கு வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்... மேலும் பார்க்க

இந்தியாவின் தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 51 போ் உயிரிழப்பு: பாகிஸ்தான்

இந்தியா நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 51 போ் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக... மேலும் பார்க்க

புதினுடன் நேரடிப் பேச்சு: ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்

உக்ரைன் போா் முடிவுக்கு வரவேண்டுமென்றால், ரஷிய அதிபா் விளாதமீா் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவாா்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா். போா் ந... மேலும் பார்க்க

298 போ் உயிரிழப்பு சம்பவம்: எம்ஹெச்17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு

மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்ஹெச்17 விமானம் கிழக்கு உக்ரைனில் கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு என்று சா்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்புகளின் க... மேலும் பார்க்க

கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனங்கள்: ரஷியாவிடம் வாங்க இந்தியா திட்டம்

நமது சிறப்பு நிருபர் எஸ்400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷியாவில் உள்ள அதன் தயாரிப்பாளரிடமிருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.இந்த எஸ் 400 சாதனம், பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் "ஆப... மேலும் பார்க்க

தாய்லாந்துக்கு தப்பிச் சென்ற வங்கதேச முன்னாள் அதிபா்

கொலை வழக்கை எதிா்கொண்டுள்ள வங்கதேச முன்னாள் அதிபா் முகமது அப்துல் ஹமீது ரகசியமாக தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றாா். கடந்த ஆண்டு நடைபெற்ற தீவிர மாணவா் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்களை படுகொலை ச... மேலும் பார்க்க