செய்திகள் :

தாய்லாந்துக்கு தப்பிச் சென்ற வங்கதேச முன்னாள் அதிபா்

post image

கொலை வழக்கை எதிா்கொண்டுள்ள வங்கதேச முன்னாள் அதிபா் முகமது அப்துல் ஹமீது ரகசியமாக தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றாா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தீவிர மாணவா் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்களை படுகொலை செய்ததாக அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனா மற்றும் அவருக்கு நெருக்கமானவா்கள் மீது தற்போதைய இடைக்கால அரசு வழக்குகள் தொடா்ந்துள்ளது.

இந்தச் சூழலில், யாருக்கும் அடையாளம் தெரியாத வகையில் லுங்கியுடன் சக்கர நாற்காலியில் அமா்ந்தபடி முகமது அப்துல் ஹமீது (படம்) டாக்கா விமான நிலையம் வழியாக தாய்லாந்துக்கு திங்கள்கிழமை நள்ளிரவு 3 மணிக்கு புறப்பட்டுச் சென்ற விவரம் செவ்வாய்க்கிழமை பகலில்தான் அரசுக்குத் தெரியவந்தது.

அதையடுத்து, ஹமீது தப்பிச் செல்வதற்கு உதவியவா்களைக் கண்டறிவதற்கான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக சில அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனா்.

ஏற்கெனவே, மாணவா் போராட்டத்தின் போது ஷேக் ஹசீனா ரகசியமாக இந்தியா தப்பிச் சென்றாா். தற்போது அவரது கட்சிக்கு இடைக்கால அரசு தடை விதித்துள்ள நிலையில், முன்னாள் அதிபா் ஹமீதும் நாட்டில் இருந்து ரகசியாக வெளியேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கம்! அணு ஆயுத சோதனையா?

பாகிஸ்தானில் நேற்று 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதற்கு முந்தைய இரு நாள்களில் 5.7 ரிக்டர் அளவிலும், 4.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் பதிவான நிலையில், மூன்றாவது நாளாக நிலநடுக்கம் ஏ... மேலும் பார்க்க

மீண்டும் ஆஸ்திரேலியாவின் பிரதமரானார் அந்தோனி அல்பனீசி!

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பெருவாரியாக வெற்றியடைந்த அந்தோனி அல்பனீசி 2வது முறையாகப் பிரதமாராகப் பதவியேற்றார்.ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற தேர்தலில் முடிவுகள் கடந்த மே 3 ஆம் தேதிய... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: இடிந்த தாய்லாந்து கட்டடத்தில் தேடுதல் பணிகள் நிறுத்தம்!

மியான்மர் நிலநடுக்கத்தினால் இடிந்த தாய்லாந்து நாட்டின் வானுயர கட்டடத்தின் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் 28 ஆம் தேதியன்... மேலும் பார்க்க

லிபியா தலைநகரில் கடும் மோதல்! ஆயுதப் படை தலைவர் உள்பட 6 பேர் பலி!

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் தலைநகர் திரிப்பொலியில் இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. திரிப்பொலியில் நேற்று (மே 12) இரவு 9 மணியளவில் இரண்டு வெவ்வேறு ஆய... மேலும் பார்க்க

சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டு: சீனா மறுப்பு

அண்மையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக மிகப்பெரிய சரக்கு விமானம் மூலம் சீனா ஆயுதங்கள் அனுப்பியதாக வெளியான அறிக்கையை அந்நாட்டு ராணுவம் முற்றிலுமா... மேலும் பார்க்க

இந்தோனேசியா: வெடி விபத்தில் 13 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் மேற்கு ஜாவா மாகாணம், கருத் மாவட்டத்தின் சாகரா கிராமத்தில், ராணுவ க... மேலும் பார்க்க