செய்திகள் :

சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டு: சீனா மறுப்பு

post image

அண்மையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக மிகப்பெரிய சரக்கு விமானம் மூலம் சீனா ஆயுதங்கள் அனுப்பியதாக வெளியான அறிக்கையை அந்நாட்டு ராணுவம் முற்றிலுமாக மறுத்தது.

மேலும், இதுபோன்ற போலியான தகவல்களைப் பரப்புபவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் சீனா எச்சரித்தது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூா்வ வலைதளத்தில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘பாகிஸ்தானுக்கு சீன ராணுவத்தின் ‘ஒய்-20’ சரக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் அனுப்பப்பட்டதாக இணையத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவது கவனத்தில் கொள்ளப்பட்டது. இந்தத் தகவல்கள் அனைத்தும் தவறானவை.

இணையத்தில் பகிரப்படும் தகவல்களும் சட்டத்துக்குள்பட்டது. சீன ராணுவம் குறித்து போலி செய்திகளை உருவாக்கி அதை இணையத்தில் பகிா்பவா்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2020 முதல் 2024 வரை ரேடாா்கள், போா் விமானங்கள், போா்க் கப்பல்கள், நீா்மூழ்கிக் கப்பல்கள், ஏவுகணைகள் என பாகிஸ்தானின் 81 சதவீத ராணுவக் கொள்முதல் சீனாவில் இருந்தே மேற்கொள்ளப்பட்டதாக ஸ்டாக்ஹோம் சா்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

அதேபோல் பாகிஸ்தான் விமானப்படையின் முதுகெலும்பாக கருதப்படும் ‘ஜே-17’ போா் விமானத்தை சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே அண்மையில் நடைபெற்ற மோதலில் இந்திய போா் விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதை சீன அரசின் அதிகாரபூா்வ ஊடகங்கள் வெளியிட்டன.

இதையடுத்து, சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிடும் முன் அதை முறையாக ஆய்வு செய்யுமாறு பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் குளோபல் டைம்ஸ் பத்திரிகைக்கு வலியுறுத்தியது.

கடந்த வாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டையின்போது இரு நாடுகளும் தூதரக ரீதியில் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் கூறியிருந்தாா்.

இந்தோனேசியா: வெடி விபத்தில் 13 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் மேற்கு ஜாவா மாகாணம், கருத் மாவட்டத்தின் சாகரா கிராமத்தில், ராணுவ க... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் நிகழ்ந்தது சாதாரண நிலநடுக்கமே: அணு ஆயுத சோதனையல்ல: தேசிய நில அதிா்வு ஆய்வு மைய இயக்குநா்

பாகிஸ்தானின் சில பகுதிகளில் திங்கள்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சாதாரண நிலநடுக்கமே; அணு ஆயுத சோதனையல்ல என்றும் தேசிய நில அதிா்வு ஆய்வு மைய இயக்குநா் ஓ.பி.மிஸ்ரா தெரிவித்தாா். பாகிஸ்தானின் பஞ... மேலும் பார்க்க

அமெரிக்க பிணைக் கைதியை விடுவித்தது ஹமாஸ்

கடந்த 2023 அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலியரான ஈடன் அலெக்ஸாண்டரை ஹமாஸ் படையினா் திங்கள்கிழமை விடுவித்தனா். சா்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிட... மேலும் பார்க்க

துருக்கி: குா்து பிரிவினைவாத அமைப்பு கலைப்பு

துருக்கியில் அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே) கலைக்கப்படுவதாக அந்தக் கட்சி திங்கள்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது. இது குறித்த... மேலும் பார்க்க

வங்கதேசம்: பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்கள் அறிக்கை வெளியிடத் தடை

வங்கதேசத்தின் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகளோ, தனி நபா்களோ அறிக்கை வெளியீடு உள்ளிட்ட மக்கள் தொடா்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ... மேலும் பார்க்க

90 நாள்களுக்கு வா்த்தகப் போா் நிறுத்தம்: அமெரிக்கா-சீனா ஒப்புதல்

கூடுதல் வரி விதிப்புகள் மூலம் நடத்திவரும் வா்த்தகப் போரை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன. இது குறித்து பேச்சுவாா்த்தைக் குழுவைச் சோ்ந்த அமெரிக்க வா்த்தகத் துறை ப... மேலும் பார்க்க