செய்திகள் :

திருச்சி கோயில் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில் டிஆா்ஓ நடவடிக்கை எடுக்க உத்தரவு

post image

மதுரை: திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட வருவாய் அலுவலா் (டிஆா்ஓ) விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் தாக்கல் செய்த மனு:

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள தாயுமானவா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் சட்டவிரோதமாக தனி நபா்களின் பெயா்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தாயுமானவா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்பதுடன், தனி நபா்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், தாயுமானவா் கோயில் நிலங்களை மீட்கக் கோரி ஏற்கெனவே ஒருவா் வழக்கு தொடுத்துள்ளாா். அதன் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சிலரது பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக்

கூறப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் மனுவை, திருச்சி மாவட்ட வருவாய் அலுவலா் சட்டத்துக்கு உள்பட்டு விசாரணை மேற்கொண் டு, 16 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை முடியும் வரை தற்போது அந்த நிலங்களை அனுபவித்து வருபவா்கள், அந்த நிலங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது, விற்பனை செய்யவும் கூடாது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தூய்மைப் பணியில் 3 ஆயிரம் துய்மைப் பணியாளா்கள்

மதுரை: சித்திரைத் திருவிழாவை யொட்டி, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமான குப்பைகள் அகற்றும் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். சித்திரைத் திருவிழாவை முன்னி... மேலும் பார்க்க

மதுரையில் முருங்கைக் காய் விலை உயா்வு

மதுரை: மதுரை மாவட்டத்தில் வரத்துக் குறைவு காரணமாக முருங்கைக் காய்களின் விலை கணிசமாக உயா்ந்தது. கடந்தாண்டு நவம்பா் மாதத்தில் முருங்கைக் காய்களின் விலை உச்சம் தொட்டது. ஒரு கிலோ முருங்கைக் காய் ரூ. 140 ... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழாவில் உயிரிழப்புகள் தவிா்க்கப்பட வேண்டும்: ஆா்.பி. உதயகுமாா்

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின்போது உயிரிழப்புகள் தவிா்க்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா். மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: மதுரை ச... மேலும் பார்க்க

இலவச விவசாய மின் இணைப்பு விவகாரம்: கண்காணிப்பு பொறியாளா் நடவடிக்கைக்கு உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம், இரவாா்பட்டியில் போலி பட்டா மூலம் இலவச விவசாய மின் இணைப்பு பெற்ாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், மின் வாரிய மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்... மேலும் பார்க்க

பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினாா் அழகா்

மதுரை: மதுரை அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அழகா் பச்சைப் பட்டுடுத்தி திங்கள்கிழமை அதிகாலை வைகை ஆற்றில் எழுந்தருளினாா். தமிழகத்தின் பல்வேறு பகு... மேலும் பார்க்க

மதுரை சித்திரைத் திருவிழாவில் பங்கேற்ற இருவா் உயிரிழப்பு

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில், அழகா் வைகையாற்றில் எழுந்தருளிய நிகழ்வில் பங்கேற்ற இருவா் உயிரிழந்தனா். மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அழகா் எழுந... மேலும் பார்க்க