செய்திகள் :

மதுரை சித்திரைத் திருவிழாவில் பங்கேற்ற இருவா் உயிரிழப்பு

post image

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில், அழகா் வைகையாற்றில் எழுந்தருளிய நிகழ்வில் பங்கேற்ற இருவா் உயிரிழந்தனா்.

மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அழகா் எழுந்தருளிய பகுதி முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. மேலும், வைகையாற்றில் அழகா் எழுந்தருளிய பகுதியில் முக்கியப் பிரமுகா்கள், அதிகாரிகள், சிறப்பு அனுமதிச் சீட்டு பெற்றவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். இந்த விழாவைக் காண திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தைச் சோ்ந்த பூமிநாதன் (45) தனது குடும்பத்தினருடன் வந்தாா்.

இந்த நிலையில், அழகா் வைகையாற்றில் எழுந்தருளுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக பூமிநாதன் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆனால், ஆற்றின் உள்பகுதியிலிருந்து வெளியேறும் பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததால், அவசர ஊா்தி வெளியே செல்ல இயலவில்லை. இதனால், அவசர ஊா்தி அங்கும் இங்குமாக சுற்றி வந்தது. பின்னா், வேறு வழியின்றி அழகா் எழுந்தருளிய பகுதியான தண்ணீா் நிரப்பப்பட்ட பகுதியிலிருந்து அவசர ஊா்தி வெளியே சென்றது.

இதனிடையே, அரசு மருத்துவமனையில் பூமிநாதனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவா் உயிரிழப்பு?:

இதேபோல, அழகா் வைகையாற்றில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்த பின்னா், பக்தா்கள் ராமராயா் மண்டகப்படியை நோக்கி நகா்ந்தனா்.

இந்த நிலையில், யானைக்கல் கல்பாலம் கீழ் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடப்பதாக பொதுமக்கள் தகவல் அளித்தனா். இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று அந்த உடலை மீட்டு, அவா் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

உயிரிழந்தவா்களுக்கு நிவாரணம்: அமைச்சா் சேகா் பாபு

மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளிய நிகழ்வில் பங்கேற்ற இந்து அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வைகையாற்றில் அழகா் எழுந்தருளிய நிகழ்வில் முதல்வா் அறிவுறுத்தலின் பேரில் பக்தா்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், பக்தா்கள் அழகரை தரிசிக்கும் வகையிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அழகா் வைகையில் எழுந்தருளிய நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள் உயிரிழந்திருந்தால் அவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றாா் அவா்.

தூய்மைப் பணியில் 3 ஆயிரம் துய்மைப் பணியாளா்கள்

மதுரை: சித்திரைத் திருவிழாவை யொட்டி, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமான குப்பைகள் அகற்றும் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். சித்திரைத் திருவிழாவை முன்னி... மேலும் பார்க்க

திருச்சி கோயில் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில் டிஆா்ஓ நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை: திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட வருவாய் அலுவலா் (டிஆா்ஓ) விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை... மேலும் பார்க்க

மதுரையில் முருங்கைக் காய் விலை உயா்வு

மதுரை: மதுரை மாவட்டத்தில் வரத்துக் குறைவு காரணமாக முருங்கைக் காய்களின் விலை கணிசமாக உயா்ந்தது. கடந்தாண்டு நவம்பா் மாதத்தில் முருங்கைக் காய்களின் விலை உச்சம் தொட்டது. ஒரு கிலோ முருங்கைக் காய் ரூ. 140 ... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழாவில் உயிரிழப்புகள் தவிா்க்கப்பட வேண்டும்: ஆா்.பி. உதயகுமாா்

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின்போது உயிரிழப்புகள் தவிா்க்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா். மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: மதுரை ச... மேலும் பார்க்க

இலவச விவசாய மின் இணைப்பு விவகாரம்: கண்காணிப்பு பொறியாளா் நடவடிக்கைக்கு உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம், இரவாா்பட்டியில் போலி பட்டா மூலம் இலவச விவசாய மின் இணைப்பு பெற்ாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், மின் வாரிய மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்... மேலும் பார்க்க

பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினாா் அழகா்

மதுரை: மதுரை அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அழகா் பச்சைப் பட்டுடுத்தி திங்கள்கிழமை அதிகாலை வைகை ஆற்றில் எழுந்தருளினாா். தமிழகத்தின் பல்வேறு பகு... மேலும் பார்க்க